Sembaruthi Serial: இவ்ளோ ரண களத்திலும்.. என்ன ஒரு குதூகலம்...!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் இவ்ளோ ரண களத்திலும் ஒரு குதூகலம் கேட்குதான்னு சொல்ற அளவுக்கு ஆதி, பார்வதி நிலை இருக்கு. அகிலாண்டேஸ்வரி செம கோவத்தில் இருக்காங்க.
இங்கே புருஷன் கூட முதன்முதலா சேர்ந்து ஆஃபீஸுக்கு போறோம்னு பார்வதி கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்த்துக்கொண்டு இருக்கிறாள். இதை பார்த்த ஆதி அவளை கிண்டல் செய்கிறான்.
என்னடா குட்டிமா இவ்ளோ சீக்கிரம் ரெடியாகிட்டேன்னு கேட்டு அவளை சிணுங்க வைக்கிறான். அவளும் போங்க மாமா..கிண்டல் பண்ணாதீங்க என்று கொஞ்சுகிறாள்.
மாமா குட்டிமா
என்ன மாமா கிளம்ப லேட்டாயிருச்சான்னு பார்வதி கேட்க.. இல்லை குட்டிமா.. வெறும் ரெண்டு மாணி நேரம்தான் ஆச்சுன்னு சொல்றான் ஆதி. மாமா இந்த புடவை எனக்கு நல்லாருக்கான்னு பார்வதி கேட்க.. நீ எது கட்டினாலும் அழகாத்தான் இருக்கும்னு இவன் சொல்றான். இல்லை மாமா நல்லா இல்லைனா நான் வேற புடவை கட்டிக்கிட்டு வரட்டுமா?
நீ கட்டிப்பார்
நான் இங்கேயே நிற்கறேன்.. நீ எத்தனை புடவை வேணும்னாலும் கட்டிப் பார்த்துட்டு வான்னு சொல்றான் ஆதி. வேணாம் மாமா இதுவே போதும்.. இந்த புடவை உங்க டிரஸுக்கு மேட்சா இருக்குன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டா பார்வதி. வா கீழே போயி சாப்பிடலாம்னு ஆதி பார்வதியை கூப்பிடறான்.
ஐயையோ கீழேயா
ஐயையோ கீழேயா .. என்று அலறுகிறாள் பார்வதி. நான் கீழே சாப்பிடத்தானே கூப்பிட்டேன் எதுக்கு இப்படி பயப்படறே பார்வதி..வான்னு சொல்றான். மாமா நான் சாப்பாடு எடுத்துட்டு இங்கே வரேன்.. ரெண்டு பேரும் சாப்பிடலாம்னு சொல்றா பார்வதி. கீழே போகலாம் வா..என்னதான் நடக்குது பார்த்துக்கலாம்னு அழைச்சுட்டு போறான் ஆதி.
டைனிங் டேபிளில்
டைனிங் டேபிள் முன் எல்லாரும் நிற்க.. அகிலாண்டேஸ்வரி கம்பீரமா கீழே இறங்கி வர்றாங்க. அவங்க டைனிங் டேபிள் முன் சேரில் உட்கார.. மற்றவர்கள் உட்கார்ந்தாச்சு. பார்வதியும் ஆதியும் நிக்கறாங்க. அகிலா அம்மா ஒன்னும் பேசலை.. ஆதி பார்வதியை உட்கார வைக்கிறான். மெதுவா அவள் உட்கார இவங்க எழற மாதிரி சீன் வைப்பாங்கன்னு பார்த்தால்.. அதுதான் இல்லை.