அவசரப்பட்ட ஆர்த்தி? வில்லனான ஜெயம் ரவி.. தெருவில் நடந்த டேமேஜ்.. ரவி மோகனின் ஒட்டாத உறவு: பிரபலம்
சென்னை: ஒருமுறை தான், மனம் நம்பிக்கை வைக்கும்.. எனவே, உறவுகளை மீண்டும் போலியாக ஒட்ட வைக்க முடியாது.. மீண்டும் நம்பிக்கை பூக்காது.. மீண்டும் அதே காதல் மலர்வதற்கு எப்போதுமே சாத்தியமில்லை.. இதற்கு மேலும் என்னால சகிக்க முடியல என்று சொல்லி குடும்ப நலநீதிமன்றத்தை நாடி விவாகரத்து கேட்கும் அளவுக்கு சென்றுவிட்டார் ஜெயம் ரவி" என்று எழுத்தாளர் ராஜ கம்பீரன் கருத்து கூறியிருக்கிறார்.
நடிகர் ரவி மோகன் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த ஐந்து ஆண்டுகளாக, என் பெற்றோருடன் உறவாட கூட அவர்கள் தடை விதித்தனர். என் முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்காக மட்டுமே என்னை பயன்படுத்தினர். என்னை கணவராக பார்க்கவில்லை; தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார். பல முறை என் பெயரில், கடன் உத்தரவாதம் வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன்" என்றெல்லாம் கூறியிருந்தார்.

நீயா நானா
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் பேட்டி தந்துள்ள கவிஞரும், எழுத்தாளருமான ராஜ கம்பீரன், "நீயா நானா என்பது குடும்பத்துக்கு சரிவராது.. யாராவது ஒருவர் அதிகாரம் செலுத்தும்போது, மற்றொருவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தவகையில், ஆர்த்தியுடன் தன்னால் வாழ முடியவில்லை என்று சொல்லி, அங்கிருந்து தப்பித்து ஓடிவந்து இன்னொரு பெண்ணிடம் சரணடைகிறார் ஜெயம் ரவி.. இதை அவர் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்..
சகிக்க முடியவில்லை
இதற்கு மேலும் என்னால சகிக்க முடியல என்று சொல்லி குடும்ப நலநீதிமன்றத்தை நாடி விவாகரத்து கேட்கும் அளவுக்கு சென்றுவிட்டார் ஜெயம் ரவி. எவ்வளவுதான் சொன்னாலும் சிலரது இயல்பு என்பது மாறவே மாறாது.. சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் டைவர்ஸ் என்பது அதிகமாக காரணமே இதுதான்.
அதற்காக தங்களது குழந்தைகளை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது.. போர்க்களத்தில்கூட குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச விதி உள்ளது.. ஆனால், பல குடும்பங்களில் இதை பின்பற்றப்படுவதில்லை..
வில்லனாகி போன ஜெயம் ரவி
தங்களுக்குள்ள கோபம், ஆற்றாமை, வெறுப்பை குழந்தைகளிடம் மூளை சலவை செய்கிறார்கள். குழந்தைகள் இருவருக்குமே சொந்தம் என்று கோர்ட்டிலேயே சென்று ஆர்டர் வாங்கினாலும், சில வீடுகளில் குழந்தைகளை பார்க்க அப்பாவை அனுமதிப்பதில்லை..
விவாகரத்து தராமல் ஆர்த்தி அடம் பிடிக்க காரணம் ஜெயம் ரவியை வில்லனாக்குகிறார்கள்.. அவரது இமேஜை காலி செய்வதுதான் நோக்கமாக உள்ளது.. ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், தகராறே செய்ய மாட்டார்கள்.. பிரச்சனைக்கான அடிப்படை என்ன? 2 மனம் முரண்களுக்கான என்ன? "என்னுடைய அப்பாவை கூட பார்க்க கூடாது, அவருக்கு செலவுக்கு பணம் தரக்கூடாதுன்னு தடுத்தாங்கன்னு" ஜெயம் ரவி சொல்லும் அளவுக்கு கன்ட்ரோல் செய்தது யார்?
இமேஜை டேமேஜ்
ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பினால், ஜெயம் ரவிக்கு பிடிக்காத விஷயத்தை செய்திருக்க மாட்டார்களே? விருப்பமில்லாத விஷயத்தில் அத்துமீறி செய்ய மாட்டார்கள்.. ஆனால், உனக்கு பிடிக்காத அனைத்தையும் செய்வேன், நீ என்னிடம் வந்துதான் ஆக வேண்டும் என்று சொல்வது சரியல்ல. இப்படி தெருவுக்கு கொண்டுவந்து இமேஜை காலி செய்வதன் மூலமாக, வெறுப்புதான் மேலும் அதிகமாகும்..
இந்த தம்பதி இருவரிடமும் பணம் உள்ளது, படிப்பு உள்ளது, அந்தஸ்து உள்ளது.. ஆனால், இல்லாமல் உள்ளது, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான். ஒருவருக்கொருவர் வைக்கும் அன்பு குறைந்துவிடுவதால்தான், சந்தேகம் அதிகமாகிறது.
அன்பால் கட்டப்படுவதே வீடு
வீடு என்பது அன்பால் கட்டப்படுவது.. அந்த வீட்டுக்கு திரும்புகிறபோது சந்தோஷம், நிம்மதி கிடைக்காவிட்டால், அந்த வீட்டுக்கு ஏன் போகணும்? என்ற எண்ணம் வந்துவிடும்.. ஜெயில் அனுபவம் போல இருந்தால், மாற்றுப்பாதையில் செல்ல முடிவு செய்துள்ளார்..
ஒருமுறை தான், மனம் நம்பிக்கை வைக்கும்.. எனவே, உறவுகளை மீண்டும் போலியாக ஒட்ட வைக்க முடியாது.. மீண்டும் நம்பிக்கை பூக்காது.. மீண்டும் அதே காதல் மலர்வதற்கு எப்போதுமே சாத்தியமில்லை..
அப்படியானால், இங்கே பலபேர் சகித்து கொண்டு, பொறுத்துக்கொண்டு அனுசரித்து குடும்பம் நடத்தவில்லையா? என்று கேட்கலாம்.. அத்தனை பேருமே தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள் என்றே அதற்கு அர்த்தம்" என்று தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications