Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்த்திக்காக பிளேடால் கையை கிழித்து கொண்ட ரவி மோகன்.. இது ஜெயம் ரவியின் விளம்பர விவாகரத்து: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருமே பிரபலமானவர்கள், பண பலம் உள்ளவர்கள்.. ஜெயம் ரவி சாதாரண நபராக இருந்திருந்தால், கோர்ட் வரை போயிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஜெயம் ரவியின் படத்தை ஓட வைப்பதற்கான விளம்பர யுக்தியாகவும் இது இருக்கலாம்" என்று பிரபல அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கருத்து கூறியிருக்கிறார்.

Retro Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள, "ஆர்த்தி ரவிமோகன் விவகாரத்துக்குள் நுழைய விரும்பவில்லை.. இது முழுக்க முழுக்க அவர்களது குடும்பத்துக்குள் நடக்கிற விஷயம்.. ஆர்த்தி குடும்பத்தை எனக்கு தெரியும். அந்தரங்கத்தில் நுழைய முடியாது.. வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது..

Television Aarti Ravi Mohan

ஆனால், விளம்பரத்துக்கு செய்வது போல தெரிகிறது.. ஏனென்றால் இன்று சினிமாவே விழுந்துவிட்டது.. நடிகர், நடிகைகளை பற்றின செய்திகளே எங்குமே இருப்பதில்லை.. லைம்லைட்டுக்காக இப்படியெல்லாம் நடக்கும்.. எனவேதான் விவாகரத்துகள், ரெயிடுகள் போன்ற பரபரப்புகள் அதிகமாகின்றன..

கவர்ச்சி உலகம்

3வது நபருடன் ஏன் செல்கிறார்? என்று ஆர்த்தி கேட்க முடியாது.. சினிமா என்பதே கவர்ச்சி உலகம்.. சினிமாவுக்கே தொடர்பில்லாத வசதியான பிள்ளைகளே 10 பெண்களுடன் போகும்போது, பெண்களும், ஆண்களும் கூடியிருக்கக்கூடிய துறையில் உள்ளவர்கள் போக மாட்டார்கள் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். இது சினிமா என்றில்லை, எங்களது மருத்துவ துறையிலும் உண்டு..

இது வெளிவிளம்பரத்துக்காக கூட இருக்கலாம். எனினும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். பெற்றோர் பிரிந்திருக்கும்போது, குழந்தைகளின் மனநிலை மாறுபடும். அந்த காலத்தில், வெள்ளைக்காரர்கள் சட்டப்படி Natural Guardian என்று தந்தையை சொல்வார்கள்.. ஆனால் அதேசமயம், குழந்தையை 11 வயது வரை தாயால்தான் வளர்க்க முடியும். எனவே, 11 வயது வரை தாயிடம்தான் குழந்தைகள் இருக்க வேண்டும் , அதற்கு பிறகு அப்பாவிடம் செல்ல வேண்டும்.

சொத்துக்கள்

தாயிடம் இருந்தாலும் சரி, தந்தையிடம் இருந்தாலும், எந்த பெற்றோரை விட்டு விலகியிருக்கிறார்களோ, அவருடன் வருடத்தில் ஒரு மாதம் அந்த குழந்தை தங்கியிருக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த காலத்தில் சட்டமாக இருந்தது. சாதாரண வீடுகளில் விவாகரத்துகள் நடக்காது, அப்போதெல்லாம் பெரிய பெரிய ஜமீன்தார்கள் வீட்டில்தான், சொத்துக்களுக்காக விவாகரத்துகள் அதிகமாக நடந்தன.

இப்போது ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருமே பிரபலமானவர்கள், பண பலம் உள்ளவர்கள்.. ஜெயம் ரவி சாதாரண நபராக இருந்திருந்தால், கோர்ட் வரை போயிருக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஜெயம் ரவியின் படம் ஓட வைப்பதற்கான விளம்பர யுக்தியாகவும் இது இருக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

காதலுக்கு மறுப்பு

இதனிடையே, Puthiya Sinthanai என்ற யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "என்னுடைய மகனுக்கு உங்கள் பெண்ணை கொடுங்கள் என்று எடிட்டர் மோகன் , சுஜாதா விஜயகுமாரிடம் கேட்டு சென்றுள்ளார்.. அதற்கு சுஜாதா விஜயகுமார், "வேண்டாம், சினிமா துறை எப்படி என்று எனக்கு தெரியும். அதனால் சினிமா நடிகரை நம்பி பெண்ணை தர மாட்டேன்" என்று சொல்லிவிட்டார்.

உடனே ஜெயம் ரவி, பிளேடு எடுத்து தன்னுடைய கையை அறுத்து, ரத்தம் ஒழுகியிருக்கிறது.. பிறகு மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை பெற்றார். இதற்கு பிறகு ஆர்த்தியும், ரவியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.. இப்படி காதலுக்காக தன்னுடைய கையை அறுத்துக் கொண்ட ஜெயம் ரவி பேசுற பேச்சா இதெல்லாம்?

கோவா - பயணம்

தன்னிடமிருந்து எல்லாவற்றையும் ஆர்த்தி குடும்பத்தினர் அபகரித்து கொண்டதாக ஜெயம் ரவி சொல்கிறார்., அப்படியானால், வெளிநாட்டு காரில் கோவாவுக்கு போனது யார்? கெனிஷாவை காரில் அழைத்துச் சென்றது யார்? இதை எந்த மனைவியாவது ஏற்றுக் கொள்வார்களா? கேரவனில் கெனிஷாவுடன் இருந்ததாக சொல்லும்போது, இதெல்லாம் ஒரு மனைவிக்கு கஷ்டமாக இருக்காதா? ஹீலர் என்றால், சிகிச்சை பெற்றுக்கொண்டு, வீட்டுக்கு திரும்பி வரவேண்டியதுதானே? "என்று கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+