குறைந்த சம்பளம்தான்.. ஆனாலும் 30 பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்த சேஷு அண்ணா.. அமுதவாணன் உருக்கம்
சென்னை: நடிகர் சேஷு, சிரிக்க வைப்பதை தாண்டி அனைவருக்கும் உதவி செய்யும் குணம் படைத்தவர் என நடிகர் அமுதவாணன் தெரிவித்துள்ளார். நடிகர் சேஷு மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பண உதவியை நாடி வரும் நிலையில் அமுதவாணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லொள்ளு சபா நடிகர் சேஷுவுக்கு குறைந்த அளவிலான சம்பளமே கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர் அந்த பணத்தில் நிறைய பேருக்கு உதவியுள்ளார் என அமுதவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேபிஒய் அமுதவாணன் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், சேஷு அண்ணா எல்லாருக்குமே உதவி செய்வார். சிரிக்க வைப்பதை தாண்டி உதவி செய்யும் குணம் அவருக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது.
சேஷு அண்ணா பெரிய வேலை எல்லாம் பார்க்கவில்லை. சின்ன சின்ன வேலை செய்வார். அதில் வரும் வருமானங்களை வைத்து பல பேருக்கு உதவி செய்து உள்ளார். நானே நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன். என்னை பல இடங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறார். "நிகழ்ச்சி எல்லாம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நீ சென்று உதவி செய்" என சொல்வார்.
சேஷு அண்ணாவிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். லொள்ளு சபா நிகழ்ச்சி சற்று டல்லாக சென்ற நாட்கள் கூட இருந்தன. அப்போது சின்ன சின்ன நிகழ்ச்சிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு உதவி செய்தார். கொரோனா காலத்தில் நிறைய விழிப்புணர்வு செய்தார். திருமணம் செய்ய முடியாமல் வறுமையில் இருந்த 30 பேருக்கு திருமணம் செய்து வைத்தார். பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுத்துள்ளார். இவ்வாறு அமுதவாணன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற ஒரு நிகழ்ச்சி பிரபலமடைந்தது. இதில் சந்தானம், ஜீவா, மனோகர், சேஷு, மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி 2004 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டு வந்தது.
பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை காமெடியாக மாற்றி லொள்ளு சபாவில் கலாய்த்திருப்பார்கள். அதில் காந்திமதி நடித்த ஓச்சாயி கிழவி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சேஷு. இதன் மூலமும் அவர் பிரபலமானார்.
இதன் மூலமாகத்தான் மேற்கண்ட நடிகர்களும் நடிகையும் சினிமாவுக்கு வந்தனர். அந்த வகையில்தான் சேஷுவும் லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோருடன் நடித்திருந்தார்.
சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய சிகிச்சைக்கு ரூ 10 லட்சத்திற்கு மேல் செலவாகிறதாம். இதனால் சேஷுவின் உயிரை காப்பாற்ற பொதுமக்களும் ரசிகர்களும் ரூ 10 லட்சம் நன்கொடையாக கொடுத்து உதவும்படி அவருடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications