என் பொண்ணு லவ் மேரேஜ்தான்! ஆனா நல்லா பிளான் செய்தா! பெசன்ட் ரவி உருக்கம்
சென்னை: என் பொண்ணு லவ் மேரேஜ்தான். ஆரம்பத்துல எல்லா அப்பாக்களை போல் எனக்கும் கோபம் வந்தது. பிறகு... என தனது மகள் குறித்து உருக்கமாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் பெசன்ட் ரவி.

நடிகர் பெசன்ட் ரவி, சர்வைவர் நிகழ்ச்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கலந்து கொண்டார். இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும் ஸ்வேதா என்ற மகளும் பிரணவ் என்ற மகனும் உள்ளனர். ரவி, சினிமாவில் நடித்தாலும் இரு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்துள்ளார்.
பெசன்ட் ரவி பார்ப்பதற்கு முரடர் போல் இருந்தாலும் அவர் நிஜத்தில் அனைவருக்கும் உதவிகளை செய்வார் என்கிறார்கள். பெசன்ட் ரவி குறித்து அவரது ஏரியாவில் யாரை கேட்டாலும் சொல்லிவிடுவார்கள். இவர் வில்லன் கேரக்டரில் நிறைய நடித்துள்ளார்.
பெசன்ட் ரவி வீட்டில் பெண்களை நிறைய படிக்க வைக்க மாட்டார்களாம். ஆனால் ரவியோ தனது மகளை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்துள்ளார். அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் இவருடைய தம்பி பிரணவ், பிபிஏ படித்திருக்கிறார்.
பெசன்ட் ரவி 6 பள்ளி படிப்பை முடித்திருந்தாலும் 6 மொழிகளை பேசுவாராம். அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் ஒரு ஸ்டன்ட் சீனில் நூலிழையில் ரவி உயிர் தப்பினார். அப்போது அர்ஜுன்தான் ரவியை காப்பாற்றியதாக பலர் தெரிவித்திருந்தனர்.
இவர் போக்கிரி, சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெசன்ட் ரவிக்கு திருமணமான போது அவருக்கு 22 வயது, மனைவி பிரபாவதிக்கு 16 வயசுதானாம். சின்ன விஷயத்துக்கெல்லாம் ரவிக்கு கோபம் வந்துவிடுமாம். ஆனால் அவரை மனைவிதான் பத்திரமாக பார்த்துக் கொண்டாராம்.
இந்த நிலையில் தனது மகள் குறித்து பெசன்ட் ரவி கூறுகையில் என்னுடைய பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா. ஆரம்பத்துல எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிற கோபம் எனக்கும் இருந்தது. அப்புறம் பார்த்தா அவங்க ஸ்கூல் படிக்கும் போதே பிரண்ட்ஸ் போல! அதனால நல்லா பிளான் பண்ணி இருக்காங்க.
நான் ஒரு காலேஜ் ப்ரொபஸர் ஆக போகிறேன். நீயும் ஒரு வேலைக்கு செல் என சொல்லி இருவருமே நல்ல நிலைக்கு வந்ததும் என் கிட்ட வந்து காதல் குறித்து சொன்னாங்க என ரவி, உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இறந்த போதுகூட, பெசன்ட் ரவிதான் கடைசி வரை அவரது குடும்பத்திற்கு உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் வீடு தொடங்கி அவரது தந்தை தகனம் செய்யப்பட்ட பெசன்ட் நகர் மின்மயானம் வரை ரவிதான் உடன் இருந்து ஓடியாடி வேலைகளை செய்தார்.












Click it and Unblock the Notifications