காதல் தோல்வின்னா சரக்கு அடிக்கணுமா.. நான் வீட்டில் எப்படி தெரியுமா.. எதிர்நீச்சல் மாரிமுத்து பேட்டி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில்தான் நான் அப்படி, மற்றபடி வீட்டில் எப்படி இருப்பேன் தெரியுமா என நடிகர் மாரிமுத்து பேட்டி அளித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில்ஆதிகுணசேகரனாக நடித்து வருபவர் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து. இவர் இயக்குநராகவும் சினிமா நடிகராகவும் சோபிக்கவில்லை.
திரைப்படங்களில் கூட சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் வந்தது எதிர்நீச்சல் சீரியல். அதில் தனது மனைவியையும் தனது தம்பி மனைவியையும் ஆணாதிக்கம் கொண்டு நடத்தும் காட்சிகள் கோபத்தை வரவழைத்தாலும் அவர் நடிப்பு அபாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏய் இந்தாம்மா, ஏய் என்னம்மா ஏய் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தியே அவர் வீட்டு பெண்களை அழைப்பார். ஜனனி ஏதாவது எதிர்த்து பேசினால் அவரது முகத்தில் அத்தனை ரசமும் தெரியும். பாடி லேங்குவேஜும் சூப்பர். இயக்குநராக இருந்திருக்கிறார், இது கூட நடிக்காவிட்டால் எப்படி என்கிறீர்களா அதுவும் வாஸ்தவம்தான்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துதான் டாப். அவருக்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் ரசிகர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் உரையாடினார். அப்போது அவர் அளித்த பதில்களை பார்க்கலாம். லியோ படத்தில் நடிக்க என்னை லோகேஷ் கனகராஜ் அழைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். நல்ல ஊதியமும் பெற்றிருப்பேன்.
அவர் அழைப்பார் என எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கலை. விக்ரம் படத்தில் நடித்திருக்கிறேன். அது போல் லியோ படத்திலும் வாய்ப்பு கொடுங்கள் என கேட்காமல் கேட்க நினைத்தேன். காதலில் தோற்று போனால் அதுவே வாழ்க்கையின் இறுதி காலம் இல்லை. அதன் பிறகும் வாழ்க்கை இருக்கு. இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.
எனக்கு மிகவும் பிடித்த வாசகம்- தடைக்கல்லை படிக்கலாக்கு. காதல் தோல்வி என்பதெல்லாம் எண்டே கிடையாது. வாழ்க்கையில் அனுபவிக்க நிறைய இருக்கு. தோல்வி அடைந்தால் சரக்கு அடித்துக் கொண்டு வீட்டுக்குள் முடங்கிகிடப்பது தவறு. உன் முன்பு வாழ்ந்து காட்டுகிறேன் என்ற வைராக்கியம் வேண்டும். எதிர்நீச்சல் சீரியலில்தான் நான் அப்படி.. ஆனால் வீடடில் லல்வியான ஆள்.
யாரையும் அதட்டி பேச மாட்டேன். இளம்பெண்களுக்கு தமிழ் புத்தகங்கள் வாங்கித் தரலாம் என நினைக்கிறேன். ஏன்னு கேட்டீங்கன்னா, அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. தமிழ் மொழியை நன்கு உச்சரித்தாலே நன்றாக இருக்கும். தமிழ் மாதங்களை சொன்னால் கூட கல்லூரி மாணவர்களுக்கு புரிவதில்லை, ஆங்கில மாதத்தில் சொல்லுங்கள் என்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் எல்லாரும் என்னை திட்டுகிறார்கள். அப்படி என்றால் அந்த கதாபாத்திரம் சரியாக இருக்கிறது என்றுதானே அர்த்தம். அந்த சீரியல் ஆரம்பித்து 200 எபிசோட் வரைதான் என்னை திட்டினார்கள். இப்போது என்னை ஹீரோவாக்கிவிட்டார்கள். அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. இவ்வாறு மாரிமுத்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications