கதாநாயகி வராததால் தான் ஓவர்நைட்டில் திரிஷா ஹீரோயின் ஆனாங்க.. அப்போ நடந்தது இதுதான்! ராதாரவி ஓபன்
சென்னை: நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் பேசும்போது நடிகை திரிஷா வேற ஒரு கதாநாயகி வராததால் தான் ஹீரோயினாக மாறினார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை திரிஷா 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இப்போதும் கதாநாயகியாக கலக்கி கொண்டிருக்கிறார். அதிலும் இவருக்கு 41 வயது ஆனாலும் இன்னும் அப்படியே இருக்கிறாறே என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஜோடி திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் அறிமுகமான திரிஷா அதற்குப் பிறகு மௌனம் பேசியதே, மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, உனக்கு 20 எனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து திருப்பாச்சி என்று பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அழகான ராட்சசி
தற்போது கூட நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த திரிஷா கொடி திரைப்படத்திற்கு பிறகு வில்லி அவதாரமும் எடுத்திருக்கிறார். ஆனாலும் அழகான ராட்சசி என்று ரசிகர்கள் இவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை பொண்ணு
சென்னையை சேர்ந்த திரிஷா ஸ்கூல் படிக்கும்போதே நாடக போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய அப்பா சென்னையில் ஆரம்பத்தில் பெரிய ஸ்டார் ஹோட்டலில் அக்கவுண்ட்ன்ட்டாக வேலை பார்த்திருக்கிறார். அதே நேரத்தில் திரிஷாவின் நடிப்பை பார்த்த அவருடைய அம்மா அவரை படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து இருக்கிறார்.
திரிஷா என்ற அணுராதிகா
திரிஷாவின் இயற்பெயர் அணு ராதிகா என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதுபோல சினிமாவில் இவர் அறிமுகமாவதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் திரிஷா பற்றி நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், நடிகைகளின் வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று சொல்லவே முடியாது.

திடீர் வாய்ப்பு
சில நடிகைகளுக்கு வாய்ப்பு எதிர்ப்பாராத விதத்தில் தான் கிடைக்கும். அது அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும். அதுபோல்தான் திரிஷாவிற்கு கிடைத்தது. திரிஷா ஒரு படத்தில் சின்ன கேரக்டரில் தான் நடிக்க கலந்து கொண்டார். ஆனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வரவில்லை.

திரிஷா பற்றி ராதாரவி
அதனால் இயக்குனர் வந்திருந்த நடிகைகளில் திரிஷா நன்றாக இருக்கிறார் என்று தான் அவரை நடிக்க செலக்ட் செய்து இருந்தார். பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்களே ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்று, அது போல தான் திரிஷா வாழ்க்கை மாறியது. இன்று திரிஷா தன்னுடைய திறமையால் எத்தனையோ ஹிட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பாராத விதத்தில் தான் சினிமாவில் கதாநாயகி ஆனார் என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசி இருக்கிறார்.
-
“அன்பு படர்ந்த கொம்பிலே அகந்தை குரங்கு!” மனைவியை துச்சமாக பேசிய விஜயை கிழித்த ப்ளூ சட்டை மாறன் -
திரிஷாவால் விஜய் அரசியலுக்கு பிரச்சனை என பேசிய பார்த்திபன்! நாய் வீடியோவை வைத்து திரிஷா போட்ட போஸ்ட்! புது பஞ்சாயத்து -
விஜயே கூப்பிட்டாலும் நான் வரலன்னு திரிஷா சொல்ல வேண்டாமா? எனக்கு வந்த மிரட்டல் போன்! பார்த்திபன் ஆதங்கம் -
8000 கோடி சொத்து..திரிஷாவின் எக்ஸ் வருண் மணியன்! மல்டி மில்லியனனுடன் நிச்சயதார்த்தம்! பிரிந்தது ஏன்? -
“திரிஷா வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது…” விஜய்க்கு குட்டு, ஓபனாக பேசிய பார்த்திபன் -
திரிஷாவை இந்த நேரத்தில் பாராட்டியே ஆகணும் ஏனென்றால்..!? பார்த்திபன் வெளியிட்ட அடுத்த வில்லங்க வீடியோ -
திரிஷாவின் செல்ல நாய் ‘இஸ்ஸி’! எந்த வகை நாய் தெரியுமா? இத்தனை சிறப்புகளாம்! இதனால் தான் ஸ்பெஷல் போல! -
Trisha: அறிவு இல்லாத அநாகரீக பேச்சு.. ”குந்தவை” பார்த்திபன் கருத்துக்கு திரிஷா கடும் கண்டனம் -
பார்த்திபனின் "குந்தவை" கமெண்ட்.. பொங்கி எழுந்த திரிஷா.. T-20யை தாண்டி டிரெண்டிங்கில் போன டாப் நடிகை -
விஜய், கௌதம புத்தர்.. குடும்பத்தை விட்டுட்டு வந்துட்டாரு! மெர்சல் நினைப்பு! வெளுத்த ப்ளூ சட்டை மாறன் -
நடிகர் விஜய், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை.. விமல், பார்த்திபன் கருத்தை கவனித்தீர்களா -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications