கதாநாயகி வராததால் தான் ஓவர்நைட்டில் திரிஷா ஹீரோயின் ஆனாங்க.. அப்போ நடந்தது இதுதான்! ராதாரவி ஓபன்
சென்னை: நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் பேசும்போது நடிகை திரிஷா வேற ஒரு கதாநாயகி வராததால் தான் ஹீரோயினாக மாறினார் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை திரிஷா 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இப்போதும் கதாநாயகியாக கலக்கி கொண்டிருக்கிறார். அதிலும் இவருக்கு 41 வயது ஆனாலும் இன்னும் அப்படியே இருக்கிறாறே என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஜோடி திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் அறிமுகமான திரிஷா அதற்குப் பிறகு மௌனம் பேசியதே, மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, உனக்கு 20 எனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து திருப்பாச்சி என்று பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அழகான ராட்சசி
தற்போது கூட நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த திரிஷா கொடி திரைப்படத்திற்கு பிறகு வில்லி அவதாரமும் எடுத்திருக்கிறார். ஆனாலும் அழகான ராட்சசி என்று ரசிகர்கள் இவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை பொண்ணு
சென்னையை சேர்ந்த திரிஷா ஸ்கூல் படிக்கும்போதே நாடக போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய அப்பா சென்னையில் ஆரம்பத்தில் பெரிய ஸ்டார் ஹோட்டலில் அக்கவுண்ட்ன்ட்டாக வேலை பார்த்திருக்கிறார். அதே நேரத்தில் திரிஷாவின் நடிப்பை பார்த்த அவருடைய அம்மா அவரை படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து இருக்கிறார்.
திரிஷா என்ற அணுராதிகா
திரிஷாவின் இயற்பெயர் அணு ராதிகா என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதுபோல சினிமாவில் இவர் அறிமுகமாவதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் திரிஷா பற்றி நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், நடிகைகளின் வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று சொல்லவே முடியாது.

திடீர் வாய்ப்பு
சில நடிகைகளுக்கு வாய்ப்பு எதிர்ப்பாராத விதத்தில் தான் கிடைக்கும். அது அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும். அதுபோல்தான் திரிஷாவிற்கு கிடைத்தது. திரிஷா ஒரு படத்தில் சின்ன கேரக்டரில் தான் நடிக்க கலந்து கொண்டார். ஆனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வரவில்லை.

திரிஷா பற்றி ராதாரவி
அதனால் இயக்குனர் வந்திருந்த நடிகைகளில் திரிஷா நன்றாக இருக்கிறார் என்று தான் அவரை நடிக்க செலக்ட் செய்து இருந்தார். பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்களே ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்று, அது போல தான் திரிஷா வாழ்க்கை மாறியது. இன்று திரிஷா தன்னுடைய திறமையால் எத்தனையோ ஹிட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பாராத விதத்தில் தான் சினிமாவில் கதாநாயகி ஆனார் என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசி இருக்கிறார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications