ஜோசியத்தையே ராஜேஷ் நம்பிட்டாரோ? 4 நாளைக்கு முன்னாடி தெரிஞ்சும்.. நிறைவேறாமல் போன கடைசி ஆசை: பிரபலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தன்னுடைய மனைவி இறந்தது ராஜேஷூக்கு ஏற்பட்ட முதல் சறுக்கலாக இருந்தது.. நாங்கள் எப்போது அவரை சந்திக்க சென்றாலும், நீண்ட நேரமாகவே பேசுவார்.. தன்னுடைய தனிமையை தன்னை சந்திக்க வருபவர்களிடம், ஆற்றாமையாக கொட்டுகிறார் என்பது அப்போதுதான் புரிந்தது. "மனைவியின் இறப்புக்கு பிறகுதான் முதுமை என்றால் என்னவென்றே எனக்கு தெரிய ஆரம்பித்தது" என்று எங்களிடமே பலமுறை சொன்னார்" என்று பிரபல எழுத்தாளர் இன்பா கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் இன்பா, "அறிவுசார்ந்த மனிதர்.. எதைப்பற்றியும் அவரிடம் பேசலாம்.. நேரத்தை மதிப்பவர்.. ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொன்னால், சரியாக அந்த நேரத்திற்குள் வந்துவிடுவார்.. மற்றவர்களும் அதுபோலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்..உடல், உணவு இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படியிருந்தால்தான் ஆயுசுக்கான களத்தை கூட்ட முடியும் என்பதில் மிகத்தெளிவாக இருந்தார்..

மனைவியின் இழப்புமனைவி இறந்தது அவருக்கு ஏற்பட்ட முதல் சறுக்கலாக இருந்தது.. நாங்கள் எப்போது அவரை சந்திக்க சென்றாலும், நீண்ட நேரமாகவே பேசுவார்.. தன்னுடைய தனிமையை தன்னை சந்திக்க வருபவர்களிடம், ஆற்றாமையாக கொட்டுகிறார் என்பது அப்போதுதான் புரிந்தது. "மனைவியின் இறப்புக்கு பிறகுதான் முதுமை என்றால் என்னவென்றே எனக்கு தெரிய ஆரம்பித்தது" என்று எங்களிடமே பலமுறை சொல்லி உள்ளார்..
கணித்த ஜோதிடம்
அதேபோல, சிவாஜி அண்ணன் 74 வயதில் இறந்துவிட்டார்.. எனக்கு 79 வயதுக்கு மேல்தான் மரணம் என்று ஜாதகத்தில் கணித்து வைத்திருக்கிறேன்" என்று எங்களிடம் சொன்னார்.. அது இப்போது பொய்யாகிவிட்டது..
இயற்கையின் கணிப்பு
வேறு மாதிரியாக இருந்தது..கடந்த 2014ம் ஆண்டு, எங்களுடன் பேசும்போது, "என்னுடைய இறப்புக்கு முன்பேயே கல்லறையை ரெடி பண்ணிட்டேன். நான் இறந்ததும் அங்கே கொண்டு போய் என்னை வைத்துவிடுங்கள்.. மரணத்தை மையப்படுத்தி எனக்கு எந்தவிதமான பயமும் இருப்பதில்லை" என்று சொல்லி அப்போதே எங்களை எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்..
நுரையீரல் தொற்று பாதிப்பு
இப்போது அவருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் தாக்கம் இருந்திருக்குமோ? என்ற சந்தேகம் வருகிறது.. காரணம், கடந்த மாதம் வெளிநாட்டில் ஒரு மாதம் தங்கியிருந்துள்ளார். அந்த கிளைமேட்டால் கூட அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.. அதற்கு முன்பே ராஜேஷூக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது..
எப்போதுமே கார்டியாக் சர்ஜஜரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நுரையீரல் சின்ன தொற்று இருந்தாலும், அது தொந்தரவாகிவிடும்.. மூச்சுத்திணறலை உடனே தந்துவிடும்.. மூச்சடைப்பு ஏற்பட்டதால், இதயநோய் வரவும் வாய்ப்புள்ளது.. அதனால் மாரடைப்பு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை..
உடலில் தென்பட்ட மாற்றம்
"நான்கைந்து நாட்களாகவே எனக்கு உடலில் மாற்றம் தெரிகிறது.. அது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை" என்று தன்னுடன் வாக்கிங் வருபவர்களிடம் சொன்னாராம். இதெல்லாம்தான் அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கும்..
எல்லாருக்குமே ஜாதகம் கணித்தார்.. சிவாஜி ஐயாவின் உடம்பு, குலம் கோத்திரம், எம்ஜிஆர் ஐயாவின் உடல்நிலை, குடும்பம், அரசியல், வாரிசு, என அனைத்தையுமே சரியாக கணித்து சொன்னார்.. அப்படியெல்லாம் சொன்னவர், தன்னுடைய வாழ்வின் கடைசி நிலைமையை சரியாக சொல்லவில்லையா? என்றே தோன்றுகிறது..
4 நாள் முன்னாடியே அவர் உடலில் சில சமிக்ஞைகள் தெரிந்தும், அதை அவர் அலர்ட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
அவரை பொறுத்தவரை, தனக்கு உடல்நிலை அனைத்திலும் சரியாகவே இருப்பதாகவும், மரணத்தை கணித்து வைத்திருக்கும் நாள் வரை நிச்சயம் உயிருடன் இருப்போம் என்றும் நம்பியிருக்கிறார்.. கடந்த மாதம் வெளிநாட்டுக்கு போய்வந்ததுமே அவர் அலர்ட் ஆகியிருக்கலாம்..
கணிப்புகள் பொய்
நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நாமே பலவாறு நினைத்து கொள்கிறோம். ஆனால், இயற்கை கணக்கு வேறுமாதிரியாக இருக்கும் என்பதையும் நினைக்க வேண்டும்.. தமிழ் திரையுலகத்திற்கும், அவரை சார்ந்த எங்களை போன்றோருக்கும் பெரிய இழப்பு..
அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது.. கடைசி கட்டங்களில் ராஜேஷை திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை.. தர்மதுரை படத்தில் தனக்கு கிடைத்த கேரக்டர் பற்றி பெருமையாக சொல்லி கொண்டேயிருந்தார்.. அதற்கு பிறகு அப்படியான கேரக்டர்கள் வரவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது.. மகனின் திருமணத்திலும் அவரால் கலந்துக்க முடியாமல் போய்விட்டது..
அவரது ஆன்மா சாந்தியடையணும்.. மறுஜென்மத்திலும் தமிழனாக பிறந்து, மக்களை மகிழ்விக்கக்கூடிய கலைஞனாக அவர் உருவாக வேண்டும் என்பதே எங்களை போன்றோரின் ஆசை" என்று தெரிவித்துள்ளார்.
More From
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications