கணவர் இறந்ததும் குடும்பத்தினர் அசிங்கப்படுத்துனாங்க! ராதிகா செய்த செயல்.. சரத்குமார் சூப்பர்! நெகிழ்ந்த அக்கா
சென்னை: நடிகர் சரத்குமாரின் அக்கா மல்லிகா ஜீ தமிழில் ஒளிபரப்பான மகா சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது சரத்குமார் தனக்காக செய்த பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார் . ராதிகாவும் சரத்குமாரும் இணைந்து தான் தன்னுடைய மகள் திருமணத்தை நடத்தி வைத்தாங்க என்று சில சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாகவே அக்கா தம்பி உறவு என்பது அழகானது. அது பலருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. ஒரு சிலருக்கு தான் அது சங்கடங்கள் ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறது. அக்கா என்பவர் ஒரு தம்பிக்கு இன்னொரு அம்மாவாக இருக்கிறார். அதுபோல சில தம்பிமார்களும் தங்களுடைய அக்காவின் கஷ்டங்களை அறிந்து தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களுக்காக உதவி செய்கிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் சரத்குமார்.

அக்கா கணவர் இறப்பு
சரத்குமாரின் ஒரே அக்கா மல்லிகாவிற்கு திருமணம் முடிந்ததும் ஐந்து மாதத்தில் கணவர் இறந்து போய்விட்டாராம். கணவர் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தினரே தன் கண் முன்பே அக்காவை ஒதுக்கி வைத்ததை பார்த்திருக்கிறார். அதை பார்த்து வருத்தப்பட்ட சரத்குமார் தன்னுடைய அக்காவை தன் வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். பிறகு சில மாதங்களிலேயே தன்னுடைய அக்காவிற்கு இன்னொரு திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்.
அக்காவுக்கு மறுமணம்
அவருக்கு இப்போது குழந்தைகள் திருமணம் முடிவடைந்த நிலையில் இருக்கின்றனர். இது குறித்து சரத்குமாரின் அக்கா முதல்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மகா சங்கமும் கடந்த வாரத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்.
சரத்குமார் செய்த செயல்
அப்போது சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய அக்கா பேசி இருந்தார். அவருடைய அக்கா பேச்சைக் கேட்க கேட்க சரத்குமாரும் கண்கலங்கி அழுதிருந்தார். அதில் சரத்குமார் வீட்டில் குழந்தையாக இருக்கும்போது செய்யும் சுட்டித்தனம் போன்றவற்றை பேசி இருந்தார். சரத்குமார் வீட்டில் அவரும் அவருடைய அண்ணன் மற்றும் அக்கா இரண்டு தானாம். அவருடைய அண்ணன் இறந்து போய்விட்டாராம்.

அக்காவின் பாசம்
இப்போது சரத்குமாரும், அக்காவும் மட்டும் தான் இருக்கிறார்களாம். தனக்கு முழு சப்போர்ட் மற்றும் என்னுடைய முதல் தோழி என்னுடைய அக்கா தான் என்று சரத்குமார் கூறியிருக்கிறார். அதுபோல சரத்குமார் அக்கா மல்லிகா பேசும் போது என்னுடைய தம்பி என்னிடம் தான் அதிகமாக க்ளோசாக இருப்பான். குழந்தையாக இருக்கும்போது நான் சொல்லும் கதைகளை எல்லாம் முதல் முறை கேட்பது போல உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருப்பான்.
தம்பியின் அன்பு
நாங்கள் எல்லோரும் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது அவன் படிக்காமல் புத்தகத்தை தன்னை சுற்றி அடுக்கி வைத்துவிட்டு என்னை எந்த பூச்சியும் தாக்கி விடக்கூடாது என்பதற்காக அரண் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். அதையெல்லாம் நாங்கள் ரசித்திருக்கிறோம் பிறகு நடிக்கப் போகிறேன் என்பதை கூட முதல் முறை என்னிடம் தான் வந்து சொன்னான்.

ராதிகா சொன்ன வார்த்தை
என்னுடைய கணவர் இறந்த பிறகு நான் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு சோகத்திலும், கஷ்டத்திலும் இருந்தேன். அப்போது என்னுடைய நிலைமை புரிந்து என்னை வீட்டிற்கு அழைத்திட்டு வந்து எனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தான். என்னை பார்க்கும் போது ராதிகா இப்பவும் பாசமலர் என்று எங்கள் இருவரையும் கிண்டல் செய்வார். நாங்கள் அவ்வளவு பாசமாக இருப்போம்.
கண் கலங்கிய சரத்குமார்
எனக்கு ஒன்று என்றால் என்னுடைய தம்பி துடித்து போய்விடுவான். அவனுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்கவே முடியாது. சரத்குமார் என்னுடைய மனதில் நினைப்பதை எல்லாம் உடனே நிறைவேற்றி விடுவான். அவனுக்காக நான் எப்போதும் இருப்பேன் என்று அந்த நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசியிருக்கிறார். தன்னுடைய அக்கா பேச பேச சரத்குமார் கண் கலங்கி இருக்கிறார். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications