பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா விலகியது பற்றி கோபி வெளியிட்ட பதிவு.. கன்ஃபார்ம் அந்த பிரச்சனையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ரித்திகா அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இது குறித்து ரித்திகா எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில் அந்த சீரியலில் கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் மறைமுகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று நடிகர்கள் மாறுவது புதியதல்ல. காரணம் சீரியல்கள் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில நடிகர்களால் தொடர்ச்சியாக அந்த கேரக்டரில் பயணிக்க முடியாமல் ஆகிவிடுகிறது. சில நேரங்களில் பர்சனல் காரணமாக இருக்கிறது. சில நேரங்களில் சீரியல் தரப்பிலிருந்தும் இந்த முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.

அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் திடீரென்று தான் இந்த சீரியலை விட்டு விலக்கப் போவதாக கூறியிருந்தார். பிறகு அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தொடர்ச்சியாக இவர் சீரியலை விட்டு விலக கூடாது என்று வேண்டுகோள் விடுத்து கருத்து தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து அவர் இந்த சீரியலை விட்டு விலக போவதில்லை என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் ரித்திகா திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக செய்திகள் பரவி வருகிறது. அது குறித்து ரித்திகா அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து பிக் பாஸ் பேக்ரவுண்ட் இருப்பது போன்ற ஒரு போட்டோ சூட்டையும் எடுத்து அதையும் வெளியிட்டு இருக்கிறார்.

அதனால் இவர் உடல் எடை அதிகரித்ததற்காக பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகப் போகிறாரா? அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விளக்கப் போகிறாரா? என்று பல்வேறு கேள்விகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் அமிர்தாவுக்கு மாமனார் கோபியாக நடிக்கும் சதீஷ் "எங்கிருந்தாலும் வாழ்க" என்று ரித்திகாவும் சதீஷும் சேர்ந்து சாமி கும்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதற்கு ரித்திகா," உங்களை போன்ற ஒரு சிறந்த நடிகருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி ஐயா" என்று பகிர்ந்திருக்கும் நிலையில் அப்போ ரித்திகா சீரியலை விட்டு விலகப் போவது கன்ஃபார்ம் தானா? அதனால்தான் கோபி இப்படி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறாரா? என்று பல்வேறு கேள்விகள் குவிகிறது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்!












Click it and Unblock the Notifications