எத்தனை பேர் பேசினாலும் நிலைக்காது.. நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்.. சிவகார்த்திகேயன் பேட்டி
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி இமான் பேட்டி ஒன்றில் பேசிய கருத்து தற்போது இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பல திரைப்படங்களில் ஒன்றாக பணிபுரிந்து பல ஹிட் திரைப்படங்களை குவித்த இமான் மற்றும் சிவகார்த்திகேயன் தற்போது இணைந்து நடிக்காதது குறித்து இமான் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு சில வாரங்களாகவே சமூக வலைதளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் உள்ள பிரச்சனைதான் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சில youtube சேனல்களில் சில மாதங்களுக்கு முன்பே இமான் மற்றும் சிவகார்த்திகேயன் பிரச்சனை குறித்து விவாதித்து இருந்தது.
அப்போதெல்லாம் அமைதியாக இருக்க இமான் அதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது எதார்த்தமாக சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து விட்டதார். அவரோடு இனி நான் சேர்ந்து பணியாற்ற போவது கிடையாது. என்ன நடந்தது என்பதை வெளியே சொன்னால் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று கூறியிருந்தார்.
இமான் முன்னாள் மனைவி மோனிகா சொல்றது பொய்.. நடந்தது இதுதான்..! நடிகை குட்டி பத்மினி சொன்ன பகீர் தகவல்
அதைத்தொடர்ந்து இமானின் மனைவி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இமான் கூறுவதெல்லாம் போய் என்று சில காரணங்களை கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து இவர்களின் குடும்ப நண்பராக இருக்கும் குட்டி பத்மினியும் ஏற்கனவே எனக்கு இமானுடைய குடும்பத்தை பற்றியும் தெரியும், அவருடைய முதல் மனைவி மோனிகாவை பற்றியும் தெரியும் என்று சில தகவல்களையும் பகிர்ந்து இருந்தார்.
இப்படியாக இருக்கும் நிலையில் ஒரு தரப்பினர் சிவகார்த்திகேயன் இமான் குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார் என்று சிவகார்த்திகேயனை வைத்து மீம்ஸ் வெளியீட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் இமான் சொல்வது உண்மை என்றால் என்ன நடந்தது என்பதை தைரியமாக சொல்லலாமே? அவர் துரோகம் பண்ணி விட்டார் என்று சொல்கிறாரே தவிர என்ன துரோகம் பண்ணினார் என்று சொல்லவில்லையே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படியாக இருக்கும் நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த போது பேட்டி ஒன்றில் உங்களைப் பற்றி பொய்யான தகவல்கள் பரவும் போது நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு சிவகார்த்திகேயன் நான் சொன்ன விஷயங்கள் மாற்றி வந்துள்ளது என்றால் அதை நான் மறுக்கலாம்.

ஆனால் அது முழுமையாக பொய்யாக இருக்கும்போது நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும். பொய் என்று தெரிந்த ஒரு விஷயம் அது எத்தனை பேர் பேசினாலும் நிலைக்காது. ஒரு சிலர் அதை நம்பினாலும் அதுதான் உண்மை என்று எல்லாம் நிரூபிக்க முடியாது என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் தான் சிவகார்த்திகேயன் அப்போ இந்த பிரச்சனையில் விளக்கம் கொடுக்கவில்லையா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
அந்த படத்தில் பிகினியில் நடித்ததால் நடந்த சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த பிரியா மணி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications