நடிகர் விஜய் சேதுபதியா இப்படி..? "மலேசியா”வில் அந்த பெண்ணுக்கு.. இதற்கெல்லாம் பெரிய மனசு வேணும்..!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மலேசியாவில் ஒரு பெண்ணுக்கு செய்த உதவிதான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி மலேசியாவிற்கு சென்ற இடத்தில் தன்னிடம் ரசிகை என்று ஒரு பெண் கேட்ட உதவிக்கு சற்றும் எதிர் பார்க்காமல் அதை செய்து கொடுத்திருக்கிறார்.

என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி "மக்கள் செல்வன்" என்று அதிகமான ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது.
வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் இவர் காலடி எடுத்து வைத்து நான் இல்லாத இடமே இருக்கக் கூடாது என்று புதுவிதமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வருடத்தில் அதிகமான படங்களை கொடுக்கும் நடிகர்களில் இவரும் ஒரு ஆளாக இருக்கிறார். விளம்பரங்கள், திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோ என்று அனைத்து இடங்களிலும் இவருடைய முகம் பிரதிபலிக்கிறது.
ஆனாலும் சமீப காலமாக அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் அந்த அளவிற்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனால் வில்லனாக மாஸ் காட்டிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் கிட் அடித்து விடுகிறது. அதனாலயே விஜய் சேதுபதியை வில்லனாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இவர் கடைசியாக நடித்து வெளியான விடுதலை திரைப்படம் போன்ற ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு அதிகமான வரவேற்பை கொடுத்து இருக்கிறது.
நான் ஹீரோ என்பதை மறக்கவில்லை என்று சொல்லும் விதமாக குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவர் மலேசியாவிற்கு சென்றிருக்கும் போது அந்த தகவல்கள் தெரிந்த மலேசியாவாழ் தமிழர்கள் விஜய் சேதுபதியை முற்றுகையிட்டு விட்டார்களாம்.
அப்போது ஒரு பெண் ரசிகை தனியாக வந்து விஜய் சேதுபதியிடம் தான் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி சொல்லி அழுது புலம்பி இருக்கிறார். என்னன்னா, அங்கே மலேசியாவில் வீட்டு வேலைக்கு இவர் அழைத்து வரப்பட்டாராம். ஆனால் அந்த வேலை பிடிக்காமல் அந்த கம்பெனிக்கு தெரியாமல் வெளியே வந்து கிடைக்கிற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாராம்.
ஆனால் விசா நேரம் முடிந்ததும் தமிழகத்திற்கு போக முடியாத நிலையில் இருக்கிறேன் என்று அந்த பெண்மணி கூறியிருக்கிறார். இதையெல்லாம் விஜய் சேதுபதியிடம் கூற விஜய் சேதுபதி உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த பெண்மணியை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தாராம். இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
சன் டிவியில் சுந்தர் சி படமே இனி போட மாட்டாங்க.. அப்படியே ராகவா லாரன்ஸையும்.. நெட்டிசன் பங்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications