"விருமாண்டி” பட அபிராமியை நினைவிருக்கா? மடியில் குழந்தையோடு உருக்கமாக வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
அன்னையர் தினத்தில் தான் ஒரு அம்மாவாக மாறிய தருணத்தை அபிராமி உணர்வுபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

13 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது குழந்தை குறித்து உருக்கமாக பல தகவல்களை அபிராமி பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக நடிகை அபிராமி இப்ப வரைக்கும் இருக்கிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒரு பெண் குழந்தை ஒன்றே தத்தெடுத்து இருப்பதாக அதில் தெரிவித்திருக்கிறார்.
ஒரு சிலர் மட்டும் தான் சிரித்தாலும், முறைத்தாலும், கோவப்பட்டாலும் அழகு என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் நடிகை அபிராமி மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
கிராமத்து கேரக்டராக இருந்தாலும் சரி, நகரத்து கேரக்டராக இருந்தாலும் சரி இவருடைய தனித்துவமான சிரிப்பாலே அந்த கேரக்டரில் நிறைந்திருக்கும் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இவர் கமலுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்ததை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
அதுவரைக்கும் அமைதியாகவும் காதல் காட்சிகளிலும் நடித்து வந்த அபிராமி விருமாண்டி திரைப்படத்தில் ஒரு திமிர் ஆன கேரக்டர் மூலமாக அனைவருடைய மனதிலும் நிறைந்து இருந்தார். அந்த நேரத்தில் இவர் இனி சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் சினிமாவிற்கு கேப் விட்டு விட்டார்.
பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனின் மாறா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்றி கொடுத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்ன திரையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நானும் தன்னுடைய கணவராகிய பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருவதாக பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அது குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில் நண்பர்களை நானும் ராகுலும் இதனை அறிவிப்பதில் சிலிர்க்கிறோம். நாங்கள் ஒரு பெண் குழந்தைக்கு தாய் தந்தையாக மாறி இருக்கிறோம்.

கடந்த வருடம் இவளை நாங்கள் தத்து எடுத்துக் கொண்டோம். இது எல்லா விதத்திலும் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. தாயாக இந்த அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்கிறேன். எங்கள் குழந்தைக்கு கல்கி என பெயர் வைத்திருக்கிறோம் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது..
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications