என் முகத்தைப் பார்த்து ராதிகா சொன்ன வார்த்தை.. இப்பவும் அதை மறக்கல.. நடிகை அமலா ஓப்பன் அப்
சென்னை: நடிகை அமலா சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா சரத்குமார் தனக்கு செய்த உதவி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தான் நடிக்க வந்தபோது ராதிகா தனக்கு கொடுத்த அட்வைஸை தான் இப்போதும் பின்பற்றி வருவதாக அதில் அமலா பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகை அமலாவை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்து இருக்க முடியாது. மெல்ல திறந்தது கதவு திரைப்படத்தில் முகத்தை காட்டாமல் கண்ணை மட்டும் காட்டி "வா வெண்ணிலா.. உன்னைத்தானே வானம் தேடுது"பாட்டு மூலமாக பல ரசிகர்களின் மனதை கவர்ந்த அமலா தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்னவோ டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான "மைதிலி என்னை காதலி" திரைப்படம் தான்.

அந்த திரைப்படத்தில் வெற்றிக்குப் பிறகு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. அதே நேரத்தில் தமிழில் மட்டுமெல்லாம் அந்த நேரத்திலேயே கனடா, மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் பிஸியாக இருந்தார். பிறகு 1990 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நாக சைதன்யா, அகில் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இப்போது அமலா அதிகமாக தமிழ் திரைப்படங்களில் இல்லை என்றாலும் பிற மொழிகளில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதுபோல விலங்குகள் மீது தீவிர அன்பு கொண்ட அமலா ப்ளூ கிராஸில் மெம்பராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமலா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத பல நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அப்போது நடிகை ராதிகா சரத்குமார் குறிப்பு பேசி இருக்கிறார்.
அதாவது ஒருமுறை ஒரு திரைப்படத்திற்காக அமலா மேக்கப் போட்டு மேக்கப் ரூமில் ரெடியா இருந்தாராம். அந்த நேரத்தில் அங்கு ராதிகா வந்திருக்கிறார். ராதிகா அமலாவை பார்த்ததும் யார் உனக்கு மேக்கப் போட்டது? என்று கேட்க அமலா அங்கிருந்த மேக்கப் ஆர்டிஸை சொல்லி இருக்கிறார். அப்போது ராதிகா முன்னணி நடிகையாக அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரமாம்.
ஆனால் திடீரென்று ராதிகா அமலாவிடம் மேக்கப் குறித்து கேட்டதும் அமலாவுக்கு என்னவென்று புரியாமல் முழித்துக் கொண்டு இருந்திருக்கிறார். பிறகு இவ்வளவு அழகான முகத்துக்கு ஏன் இவ்வளவு அசிங்கமா மேக்கப் போட்டு இருக்கு என்று சொல்லி அந்த மேக்கப்பை உடனே அழிக்க சொல்லி ராதிகாவே மேக்கப் போட்டு விட்டாராம். அதையெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை என்று அமலா சொல்லி இருக்கிறார்.
அதுபோல அதற்குப் பிறகு நான் இப்ப வரைக்கும் எனக்கு எந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்களையும் வைத்துக் கொள்வது கிடையாது. எனக்கு நானே மேக்கப் போட்டு விடுகிறேன். அதற்கு காரணம் ராதிகா மேடம் அன்னைக்கு சொன்னது வார்த்தை தான். அவர் எனக்கு மேக்கப் போட்டுவிட்டதை பார்த்து நானே அசந்து போய்விட்டேன். இப்போதும் அதை நினைச்சா எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
டாப் கதாநாயகியாக இருக்கிறோமோ என்ற ஈகோ கொஞ்சம் கூட இல்லாமல் அவர் அன்னைக்கு என்னிடம் பழகினார். நான் அதற்கு முன்பு ராதிகாவிடம் அவ்வளவு நெருக்கமாக பேசி பழகியதும் கிடையாது. ஆனாலும் அவர் எனக்கு டிப்ஸ்கள் கொடுத்து விட்டு போயிருந்தார் என்று ராதிகா சரத்குமார் குறித்து அமலா பேசிய வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications