யாரடி நீ மோகினி புகழ் நட்சத்திராவுக்கு குழந்தை பிறந்தது. நட்சு 2.0 ஃபுல்லி லோடட்னு வாழ்த்திய சைத்ரா
சென்னை: ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த நட்சத்திராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் யாரடி நீ மோகினி . இதில் வெண்ணிலா எனும் அப்பாவி பெண் கேரக்டரில் நடித்திருப்பவர் நட்சத்திரா. இவர் கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நட்சத்திரா ஜீ தமிழ் சேனலில் சீரியல்களின் தயாரிப்பு நிர்வாக பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதனை காதலித்து வந்துள்ளார். இவர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ குடும்பத்திற்கு நெருக்கமானவர் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து நட்சத்திராவின் தோழி நடிகை ஸ்ரீ நிதி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் விஸ்வநாதன், நட்சத்திராவை கடத்தி திருமணம் செய்து கொண்டார், அவருடைய உயிருக்கே ஆபத்து என்றெல்லாம் பதிவிட்டிருந்தார். இதை நட்சத்திரா பகிரங்கமாக மறுத்தார். தனது தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும் அவர் தன்னை திருமண கோலத்தில் பார்க்க விருப்பப்பட்டதாகவும் அதனால்தான் தானும் விஸ்வாவும் ஒரு கோயிலில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம் என்றும் நட்சத்திரா தெரிவித்திருந்தார்.
மேலும் ஸ்ரீமதியின் தாய்க்கு எங்களது திருமணம் குறித்து தெரியும் என்றெல்லாம் கூறியிருந்தார். இதுகுறித்து ஸ்ரீமதியின் தாயிடம் கேட்ட போது நட்சத்திரா எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார். ஸ்ரீமதி சொன்னது போல் நட்சத்திராவை யாரும் கடத்தவில்லை, இத்தனை நாள் ஒன்றாக இருந்து விட்டு தற்போது திடீரென பிரிவு ஏற்படுவதை தாங்க முடியாமல் ஸ்ரீமதி அப்படி சொல்கிறார் என நினைக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் நட்சத்திரா அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதற்கு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினர். இந்த நிலையில் நட்சத்திராவுக்கு கடந்த இரு மாதங்ககளுக்கு முன்பு வளைகாப்பு நடந்தது. இந்த விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை சைத்ரா ரெட்டி கலந்து கொண்டு தனது தோழியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் அவ்வப்போது நட்சத்திரா போட்டோ ஷூட் எடுத்து ரீல்ஸ் செய்து வந்தார். நட்சத்திராவை கயல் நடிகை சைத்ரா ரெட்டி விளையாட்டுக்காக பாடாய்படுத்தினார். இந்த வீடியோவும் வைரலானது. இந்த நிலையில் நட்சத்திராவுக்கு நேற்றுஇரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். குழந்தையின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நட்சத்திராவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. சைத்ரா ரெட்டியோ நட்சு 2.0 என வாழ்த்தியுள்ளார். அது போல் கீகீயும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா வாழ்த்துகள் அக்கா என தெரிவித்துள்ளார். நட்சத்திராவுக்கு சீரியல் நடிகர், நடிகைகள் வாழ்த்துகளை பரிமாறி வருகிறார்கள். நிறைய பேர் விஸ்வநாதனுக்கு போன் செய்து நட்சத்திராவை நலம் விசாரித்து வாழ்த்துகளையும் கூறுகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications