ராதிகா கூட போன பாவத்துக்கு என்னை மாட்டி விட்டுட்டாங்க.. கதறி அழுதும் கண்டுக்கல.. நிரோஷா எமோஷனல்
சென்னை: நடிகை ராதிகாவின் சகோதரியான நடிகை நிரோஷா தன்னுடைய அக்காவால் தான் பட்ட கஷ்டம் குறித்து விளையாட்டுக்காக பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய அக்காவை நம்பி தான் போயிருந்த நிலையில் தான் வேதனையில் துடித்ததாக அதில் பேசி இருக்கிறார்.
நடிகை எம் ஆர் ராதாவின் மகளான ராதிகா மற்றும் நிரோஷா, ராதாரவி என எல்லோருமே சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகின்றனர். ஆனாலும் தங்களுக்குள் நடத்த கியூட்டான சில மலரும் நினைவுகள் குறித்து நிரோஷா உருக்கமாக பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நிரோஷாவின் அப்பா எம்.ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடன் தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம். இவருக்கு ஐந்து வயதில் இருக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்டாராம் .
நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்த நிரோஷா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். நடிக்க தொடங்குவதற்கு முன்பு நிரோஷாவின் வீட்டில் அவர்களுடைய அண்ணன்கள் இவருக்கு நடிப்பதற்கு அனுமதி கொடுக்காமல் தான் இருந்திருக்கிறார்களாம்.
ஆனால், இயக்குனர் மணிரத்தினம் தான் முதன் முதலாக ராதிகாவிடம் பேசி அவருடைய தங்கையை தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். நிரோஷாவிற்கு நடிப்பதற்கு ஆசை இருப்பதால் அவர் நடிக்கட்டும் என்று அவருக்கு பச்சைக்கொடி காட்டியது ராதிகாதானாம். முதல் திரைப்படம் ஆன அக்னி நட்சத்திரம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு வெற்றியை கொடுத்து இருந்ததாம்.
நிரோஷா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கமலுடன் இவர் நடித்த சூரசம்ஹாரம் என்னும் திரைப்படம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு சர்ச்சையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தில் அதிக அளவில் முத்த காட்சிகள் இடம் பிடித்திருந்தாலும் இந்த காட்சிகளில் எப்படி புதியதாக நடிக்க வந்த நிரோஷா சரி என்று சொல்லிவிட்டார் என்று பலர் கேள்விகளை எழுப்பி இருந்தார்களாம்.
அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்காக ராதிகாவின் சகோதரி இப்படி நடிக்க ஓகே சொல்லி விட்டார்களா?? என்று ராதிகாவின் பெயரும் அந்த நேரத்தில் அடிபட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் அதற்குப் பிறகு செந்தூரப்பூவே படத்தில் ராம்கியுடன் குடும்ப பாங்காக இவர் நடித்தது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டதாம்.
அதற்குப் பிறகு அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது ராம்கியை காதலித்து பிறகு திருமணமும் செய்து கொண்டார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நிரோஷா இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய அக்கா ராதிகா குறித்து பேசி இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் ஒரு முறை என் அக்கா வெளியே கிளம்பி கொண்டிருந்தார். அப்போ நானும் எங்கேயோ போகிறாரே என்று வருகிறேன் என்று சொன்னேன். சரி வா என்று கூட்டிட்டு போனார். அங்கே ஒரு கடையில் ஒரு பெண்ணுக்கு மூக்குத்தி குத்திக்கொண்டு இருந்தார்கள். அப்போ இப்ப இருக்கிற மாதிரி கன் சூட் கிடையாது. ஊசியை வைத்து குத்திக் கொண்டிருந்தார்கள். அந்த பொண்ணு அழுது கொண்டிருந்தது.

அடுத்ததாக அந்த பொண்ணுக்கு முடிந்ததும் எங்க அக்காவை அந்த கடைக்காரர் வாங்க மேடம் நீங்க தான் அடுத்தது என்று சொல்ல, அப்போது டக்கென்று எங்கள் அக்கா நாங்கள் இரண்டு பேரா வந்து இருக்கோம். முதலில் என் தங்கச்சிக்கு மூக்குத்தி குத்துங்க பிறகு நான் குத்துகிறேன் என்று சொல்லிவிட்டார். எனக்கு பக்கென்று ஆகிவிட்டது. காரணம் எனக்கு மூக்கு குத்துற ஐடியாவே கிடையாது. நான் அப்போ வேண்டாம் அக்கா என்று சொன்னேன்.
ஆனால் எங்க அக்கா மூக்து குத்திக்கனும் என்று கராராக சொல்ல மறுப்பு சொல்ல முடியவில்லை. பிறகு எனக்கு மூக்கு குத்தும் போது நான் பட்ட வேதனையை பார்த்து அவர் மூக்கு குத்தாமல் எனக்கு மட்டும் மூக்கு குத்துனது போதும் என்று சொல்லி அதற்காக பில் பே பண்ணிட்டு என்னை கூட்டிட்டு வந்து விட்டார் என்று சிரித்தபடியே அவரை நம்பி போனதால்.. நான் பட்ட வேதனை இருக்கே என்று நிரோஷா பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications