நடிகை பார்வதி நாயருக்கு டும் டும் டும்.. மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா? எளிமையான என்கேஜ்மென்ட்
சென்னை: நடிகர் அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபலம் அடைந்த நடிகை பார்வதி நாயரின் திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பார்வதி நாயருக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் நடிகை பார்வதி நாயர் பரிச்சயமான நபர் தான். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் அதைத் தொடர்ந்து கன்னடம், தமிழ் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ரவி மோகன் (ஜெயம் ரவி) நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் பார்வதி நாயர் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கெத்தான கேரக்டரில் பார்வதி நாயர் நடித்திருந்தார். என்னை அறிந்தால் படத்திற்காக பார்வதி நாயருக்கு துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் நாமினேட் செய்யப்பட்டது.
அதுபோல தமிழில் உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் ஜூனியர் ஷார்ட்ஸ் ஆபிஸர் ரோலில் நடித்து இருந்தார்.
அதுபோல பார்வதி நாயர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அபுதாபியில் தான். அவருடைய தந்தை துபாயில் தொழிலதிபராக இருக்கிறார். அதுபோல பார்வதி நாயரின் அம்மா கல்லூரி பேராசிரியர். இவரின் இளைய சகோதரர் ஷங்கர் ஐபிஎல் அணியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அபுதாபியில் 15 வயதிலேயே மாடலிங் துறையில் பார்வதி காலடி எடுத்து வைக்க தொடங்கி விட்டார். அதைத்தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் போது தீவிரமாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த பார்வதி கர்நாடகாவில் "மைசூர் சாண்டல் சோப்பின்" அம்பாசிடராக இருந்தார். அதோடு நேவி குயில் என்கிற அழகி போட்டியில் டைட்டில் வென்றிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் மிஸ் கர்நாடக அழகி போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். பெமிலா மிஸ் இந்தியா பெஜண்டாக கலந்து கொண்டு ஸ்டேட் லெவலில் தேர்வாகி இருக்கிறார். மாடலிங், நடிப்பு என்று அசத்தி கொண்டிருக்கும் பார்வதி நாயர் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் இவருக்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது.

அப்போது எடுத்த புகைப்படங்களை பார்வதி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சென்னையை சார்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரோடு தான் இவர்களின் நிச்சயதார்த்தம் முடிவடைந்து இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமண தேதி குறித்து விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications