சோ எங்க மாமா தான்.. எங்க அம்மாவிடம் என்னால 8 வருஷமா பேசல! அவரை பார்த்தாலே.. ரம்யா கிருஷ்ணன் உருக்கம்
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் சினிமாவில் நடிக்க வந்தது தன்னுடைய மாமாவான நடிகர் சோவிற்கு கொஞ்சம் கூட பிடிக்காது. அதனால் என்னுடைய அம்மாவிடம் அவர் சண்டை போட்டு இருந்தார் என்று தன்னுடைய குடும்ப ரகசியத்தை பற்றி முதல்முறையாக பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை. சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது படையப்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்து எல்லோரையும் மிரட்டி விட்டார். வில்லிகளில்
அதிகமானவர்களை வெறுப்படைய வைத்தது மற்றும் மிரட்டலான வில்லி என்று லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக நீலாம்பரியின் பெயரும் இருக்கும்.

அந்த அளவிற்கு ஒரே படத்தால் புகழில் உச்சிக்குப் போன ரம்யா கிருஷ்ணன் இப்ப வரைக்கும் ராஜமாதாவாக தன்னுடைய நடிப்பில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்ல நான் சின்ன திரையிலும் கில்லி தான் என்று சொல்லி அடிக்கும் விதத்தில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கலசம் சீரியல் மூலமாக சீரியலில் நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு தங்கம், ராஜகுமாரி, வம்சம் என்று அடுத்தடுத்து சீரியல்களில் பிஸியாக நடித்திருக்கிறார்.
அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு கண்டிப்பு கலந்த அனுசரணையான பேச்சால் பலரையும் கவர்ந்திருந்தார். அதுபோல பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும்போது அதில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதாவிற்கும் இடையே பெரிய கருத்து மோதல் பிரச்சனையும் வெடித்தது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா துறையில் 30 வருடங்களுக்கு மேலாக ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் அவருடைய சொந்த வீட்டில் ஒருவர் அவரை நடிக்க கூடாது என்று பிரச்சினை செய்திருக்கிறார். அதுவும் வேறு ஏதுமில்லை நடிகராகவும் அரசியல் பிரபலமான சோ தான். இவர் ரம்யா கிருஷ்ணனின் நெருங்கிய உறவினர் அதாவது ரம்யா கிருஷ்ணனின் பாட்டியும் சோ அவர்களின் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகளாம்.
இதனால் சோ ரம்யா கிருஷ்ணனின் அம்மாவிடம் ரம்யா கிருஷ்ணனை நடிக்க விட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் ரம்யா கிருஷ்ணன் விடாப்பிடியாக நடிக்க வந்து விட்டதால் சோ ரம்யா கிருஷ்ணனின் அம்மாவிடம் எட்டு வருடங்களாக பேசவில்லையாம். ஆனாலும் அவர் வீட்டில் தான் நானும் வளர்ந்தேன். அவர் எங்கள் வீட்டிலும் அதிகமாக இருப்பார். அவரிடம் நான் பேச வேண்டும் என்றாலே எனக்கு பயமாக இருக்கும். எதுவும் சொல்லி விடுவாரோ என்று பயந்து பயந்து தான் பேசுவேன் என்று அந்த பேட்டியில் நடிகர் சோ குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications