Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவக்குமாருடன் நடித்த ராணி சந்திராவை ஞாபகம் இருக்கா? பத்ரகாளியில் நடித்தாரே? 1976ல் எலும்பு கூட தேறல

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியிலிருந்து, நாம் இன்னும் மீளவேயில்லை.. வெறும் 5 நிமிடத்தில் எல்லாமே நடந்துமுடிந்துவிட்டது.. உறவினர்களை வழியனுப்ப வந்தவர்கள்கூட ஏர்போட்டை விட்டு கிளம்பியிருக்க மாட்டார்கள். அதற்குள் இப்படியாகிவிட்டது.. எத்தனையோ விமான விபத்துகளை இந்தியா சந்தித்துள்ளது. அதில் 1976-ல் நடந்த விபத்தை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.. மும்பையில் என்ன நடந்தது?

எழுத்தாளர் மகரிஷி ராணி முத்து மாத இதழில் நாவலாக எழுதிய கதையை இயக்குநர் திருலோக சந்தர் படமாக "பத்ரகாளி" என்ற பெயரில் எடுத்தார்.
ஆரூர் தாஸின் வசனத்தில் இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டானது..

Television Actress Rani Chandra Sivakumar

பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல்

கேட்டேளா இங்கே அதைப்பார்த்தேளா அங்கே என்ற பாடலும், கண்ணன் ஒரு கைக்குழந்தை , கண்கள் சொல்லும் பூங்கவிதை என்ற பாடலும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.. இன்றுவரை அந்த பாடல் டிவியில் ஒலித்து கொண்டுதானிருக்கிறது.

இதில் சிவக்குமார் ஹீரோவாகவும், ராணி சந்திரா என்ற மலையாள நடிகை ஹீரோயினாகவும் நடித்தனர்.. இந்த படம் கிட்டத்தட்ட முடியும் தறுவாயை நெருங்கியபோது, துபாய் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துபாய் சென்றார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு முடித்து திரும்பியவர் விமான விபத்தில் இறந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது வெறும் 21 தான்.. ராணி சந்திராவுடன் அவரது அம்மா, 3 தங்கைகள் மற்றும் 90 பயணிகளும் இதே விமான விபத்தில் மாண்டனர்.

இதனால் பத்ரகாளி படம் அப்படியே நின்றது.. எனினும், ராணி சந்திரா முகச்சாயலில் இருந்த புஷ்பா என்ற க்ரூப் டான்சரை வைத்து மீதிப்படத்தை எடுத்து முடித்தார் இயக்குனர்.. டூப் நடிகையை வைத்து முடித்ததில் இயக்குநருக்கு பெரிதாக திருப்தி இல்லையெனினும், கேமராமேனின் மாறுபட்ட கேமரா ஆங்கிள், , லாங்க் ஷாட் போன்றவைகளை எடுத்து, அந்த படத்தை ஒருவழியாக வெளியிட்டனர்.

மீறப்பட்ட ஒப்பந்தம்

1976 அக்டோபர் 11-ந்தேதி பம்பாயில் இந்த விமான விபத்து நடந்தது.. விமானத்தில் பயணித்த ஒட்டுமொத்த பேரும் இறந்துவிட்டார்கள்

பொதுவாக, படம் முடியும் வரை வேறு படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது, வெளிநாடுகளுக்கெல்லாம் போகக்கூடாது என்றெல்லாம் ஒப்பந்தம் போடுவது வழக்கம்.. ராணி சந்திராவுக்கும் அப்படித்தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதையும் மீறி தன்னுடைய குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.

தரை தொடும் முன்பே

சுமார் ஆயிரம் அடி உயத்தில் பறந்தபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக திரும்பி மண்ணில் பாய்ந்து விழுந்தது. இதனால் பயணிகள் மீது பெட்ரோல் பீறிட்டு அடித்ததில், விமானம் தரையை நெருங்கும் முன்பேயே தீ பிடித்து விட்டதாம்.. உடல்கள் சிதறி விழுந்து, கருகின.

உடல் பாகங்களை வைத்து, யாருடைய உடல் என்று அடையாளம்கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்த விபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் பொன்னப்ப நாடாரும் பயணித்திருந்தார்.. அவரது சடலமே அப்போது யாருக்கும் கிடைக்கவில்லை. எப்போதுமே

கடைசி ஆசையும் கருகியது

இப்படி யாருடைய அடையாளமும் தெரியாதபட்சத்தில், கருகிய சடலங்களை வைத்துதான் இறுதிச்சடங்கு நடத்தப்படும்.. அப்படித்தான் இந்த விபத்திலும் சடலம் கிடைக்காதவர்களின் குடும்பத்தினரும் இறுதிச்சடங்கை நடத்தினார்கள். 70களில் பரபரப்பாக பேசப்பட்ட விபத்து இதுவாகும்.

விபத்துக்கு பிறகு, பத்ரகாளி படம் பட்டிதொட்டியெங்கும் படம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது... தமிழில் நிறைய படங்கள் நடிக்கணும், சென்னையில் வீடு வாங்கி, அம்மா, தங்கைகளை வாழ வைக்கணும் என்று எந்நேரமும் சொல்லி கொண்டிருந்த ராணிச்சந்திராவின் ஆசையும், அவருடனேயே சேர்ந்து கருகிப்போய்விட்டது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+