நடிகை சரோஜாதேவி, ராஜீவ் காந்திக்கு செய்து கொடுத்த சத்தியம்.. இப்ப வரைக்கும் மீறல..இதுதான் காரணமா?
சென்னை: சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சரோஜாதேவி தான் ராஜீவ் காந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைசி வரைக்கும் மீறவில்லை என்று கூறி இருக்கிறார்.
ஒரு நடிகையாக பிரபலமான சரோஜாதேவி அரசியல் பிரமுகரோடு இப்படி ஒரு உடன்படிக்கை செய்து இருக்கிறாரா என்பது பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.
70ஸ் 80ஸ் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த நடிகை சரோஜாதேவி அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்று புகழப் பெற்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் சரோஜாதேவி நடித்திருக்கிறார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த சரோஜாதேவி விஜய், அர்ஜுன், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவரது நடைக்கு என்று பல ரசிகர்கள் இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இவருடைய கொஞ்சலான தமிழும் பலருடைய மனதை கவர்ந்தது தான்.
சரோஜாதேவி என்றுமே கவர்ச்சியாக உடை அணிந்து நடித்ததில்லை ஆனால் அவர் எந்த உடை அணிந்தாலும் கவர்ச்சியாக இருக்கும் என்று இவருடைய தீவிரமான ரசிகர்கள் சொல்வதுண்டு. இந்த நிலையில் இப்போதும் இவரை பல ரசிகர்கள் மிஸ் பண்ணி வருவதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து பல தகவல்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அரசியலுக்கு வராத காரணத்தை பற்றியும் சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒருமுறை சரோஜாதேவியை டெல்லிக்கு அழைத்த ராஜீவ் காந்தி மைசூரில் மண்டியா என்ற பகுதியில் போட்டியிட சொன்னாராம்.

ஆனால் சரோஜாதேவி நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் ஒரு தரப்பினருக்கு நல்லவராக இருக்கும் இன்னொரு தரப்பினருக்கு கெட்டவராக இருக்கும். ஆனால் நான் ஒரு பொதுவான ஆள் எனக்கு அரசியல் வேண்டாம் என்று கூறியிருந்தாராம். ஆனாலும் ராஜீவ் காந்தி சரி ஆனால் நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என்று கேட்டாராம். அதற்கு சரோஜாதேவியும் சத்தியம் செய்து கொடுத்தாராம். இப்ப வரைக்கும் அந்த சத்தியத்தை நான் மீறவே இல்லை என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications