நடிகை சரோஜாதேவி, ராஜீவ் காந்திக்கு செய்து கொடுத்த சத்தியம்.. இப்ப வரைக்கும் மீறல..இதுதான் காரணமா?
சென்னை: சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை சரோஜாதேவி தான் ராஜீவ் காந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைசி வரைக்கும் மீறவில்லை என்று கூறி இருக்கிறார்.
ஒரு நடிகையாக பிரபலமான சரோஜாதேவி அரசியல் பிரமுகரோடு இப்படி ஒரு உடன்படிக்கை செய்து இருக்கிறாரா என்பது பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.
70ஸ் 80ஸ் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த நடிகை சரோஜாதேவி அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்று புகழப் பெற்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் சரோஜாதேவி நடித்திருக்கிறார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த சரோஜாதேவி விஜய், அர்ஜுன், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவரது நடைக்கு என்று பல ரசிகர்கள் இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இவருடைய கொஞ்சலான தமிழும் பலருடைய மனதை கவர்ந்தது தான்.
சரோஜாதேவி என்றுமே கவர்ச்சியாக உடை அணிந்து நடித்ததில்லை ஆனால் அவர் எந்த உடை அணிந்தாலும் கவர்ச்சியாக இருக்கும் என்று இவருடைய தீவிரமான ரசிகர்கள் சொல்வதுண்டு. இந்த நிலையில் இப்போதும் இவரை பல ரசிகர்கள் மிஸ் பண்ணி வருவதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து பல தகவல்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அரசியலுக்கு வராத காரணத்தை பற்றியும் சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒருமுறை சரோஜாதேவியை டெல்லிக்கு அழைத்த ராஜீவ் காந்தி மைசூரில் மண்டியா என்ற பகுதியில் போட்டியிட சொன்னாராம்.

ஆனால் சரோஜாதேவி நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் ஒரு தரப்பினருக்கு நல்லவராக இருக்கும் இன்னொரு தரப்பினருக்கு கெட்டவராக இருக்கும். ஆனால் நான் ஒரு பொதுவான ஆள் எனக்கு அரசியல் வேண்டாம் என்று கூறியிருந்தாராம். ஆனாலும் ராஜீவ் காந்தி சரி ஆனால் நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என்று கேட்டாராம். அதற்கு சரோஜாதேவியும் சத்தியம் செய்து கொடுத்தாராம். இப்ப வரைக்கும் அந்த சத்தியத்தை நான் மீறவே இல்லை என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications