Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேடையில் பார்த்திபன் சொன்னது எல்லாமே பொய்.. நடந்தது இதுதான்.. ரகசியத்தை உடைத்த நடிகை சீதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சீதா தன்னை பற்றி பார்த்திபன் மேடையில் பேசிய சில விஷயங்கள் பொய் என்று கூறி சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார்.

நடிகை சீதாவும் நடிகர் பார்த்திபனும் காதலித்து திருமணம் செய்திருந்தனர். ஆனால் இவர்களுடைய காதல் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட்டது.

இந்த நிலையில் சீதா மற்றும் பார்த்திபன் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தன்னுடைய காதல் குறித்து பார்த்திபன் சொன்ன விஷயங்களுக்கு சீதா விளக்கம் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

actress Seetha interview talking about actor Parthiban

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று குடும்ப பாங்கான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் சீதா. இவர் தமிழில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களின் மனதில் பதித்து போனார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அதோடு சீதா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பலமொழிகளிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சீதா நடித்த புதிய பாதை திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகர் பார்த்திபன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இவர்கள் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை.

2001 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதற்குப் பிறகு சீதா சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவரோடும் அதிக நாட்கள் வாழாமல் இருந்திருந்தார். கடைசியில் அவரையும் விவாகரத்து செய்து இருந்தார். இந்த நிலையில் தனக்கு பிடித்த சினிமாத்துறையில் செகண்ட் ரவுண்டில் அதிகமாக அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பார்த்திபன் சில மேடைகளில் சீதாவின் காதலை தான் ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இருந்ததாக பேசி இருக்கிறார்.. இந்த பேச்சு சீதாவை கோபப்பட வைத்திருக்கிறது. அதற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீதா பதிலளித்திருக்கிறார். அதில் பார்த்திபன் சொல்வது அப்பட்டமான பொய் என்று கூறியிருக்கிறார்.

actress Seetha interview talking about actor Parthiban

அதோடு பார்த்திபன் ஆரம்ப காலகட்டத்தில் நடிகை சீதா உடன் போனில் பேசும்போது அந்த மூன்று வார்த்தையை கூறுமாறு அடிக்கடி சொல்லுவாராம். ஆனால் சீதா ஐ லவ் யூ எனும் அந்த மூன்று வார்த்தை சொல்லவே கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் அதற்கு பிறகு தான் தன்னுடைய காதலை தெரிவித்தாராம். ஆனால் இருவருக்கு இடையே இருந்த காதல் உண்மை என்றும் அதனால் நான் அதனால் தான் பார்த்திபன் தன்னிடம் அந்த மூன்று வார்த்தையை கூறும்படி அடிக்கடி கேட்டார் என்றும் சீதா பேசியிருக்கிறார்.

ஆனால் பார்த்திபன் மேடைகளில் சீதாவின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன் என்று சொன்னது கண்டிப்பாக போய் என்றும் அந்த பேட்டியில் சீதா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல தான் நினைத்த மாதிரி திருமண வாழ்க்கை இல்லை. திருமணத்திற்கு பிறகு நாம் எப்படி எல்லாமோ இருக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அது எல்லாமே நடக்கவில்லை என்ற போது தான் எனக்கு அந்த திருமண வாழ்க்கையில் விரத்தியே ஏற்பட்டது என்றும் சீதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+