Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ ஷகிலா சொன்னது பொய்யா? உண்மையில் நடந்தது என்ன? சாபம் விட்டு பயில்வான் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கலைஞர் டிவியில் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அவரிடம் நடிகை ஷகிலா அவருடைய மகள் குறித்து பேசியது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்போது என்ன நடந்தது என்பது குறித்து பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதனுக்கு பெரிய அளவில் அறிமுகமே தேவையில்லை. அவர் நடித்து பெயர் வாங்கியதை விடவும் இப்போது youtube சேனல்களில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி பெரிய அளவில் பிரபலமாகி கொண்டிருக்கிறார். பலர் இவருடைய வீடியோவை பார்த்து கழுவி ஊத்தி வந்தாலும் அதை கண்டுகொள்ளாத பயில்வான் தொடர்ச்சியாக நடிகைகளை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.

actress Shakeela spoke to him about Bailwan Ranganathan daughter

அதே நேரத்தில் இவர் நடிகைகளை பற்றி பேசுவதை கேட்டு கடுப்பான சில நடிகைகள் இவர் மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பயில்வான் அதை கண்டு கொள்வது கிடையாது. நடிகைகளே அவர்களைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டும்போது நான் என்ன செய்ய முடியும். அதனால் தான் நான் என்னுடைய சேனல் மூலம் அவர்கள் பெற்றி பல விஷயங்களை எடுத்துக் கூறுகிறேன் என்று அசால்டாக பயில்வான் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் நடிகை குயிலி தொகுத்து வழங்கும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷகிலா நீங்க நடிகை வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறீர்களே? உங்கள் வீட்டில் என்ன நடக்கிறதுனு உங்களுக்கு தெரியுமா? உங்க கடைசி பொண்ணு யாரை லவ் பண்றாங்கனு தெரியுமா? உங்க பொண்ணு இன்னொரு பொண்ணை தான லவ் பண்றாங்க?

அந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி கேட்க அதைக் கேட்டு பயில்வான் அப்போதே கோபப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விஷயம் பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இப்போது பயில்வான் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் உங்கள் மகள் பற்றி ஷகிலா சொன்னது உண்மையா என்று கேட்க அதற்கு கோபமான பயில்வான் இந்த கேள்வியை மட்டும் கேட்காதீங்க என்று எழுந்து போக போகிறார்.

அதற்கு நிருபர் அப்போ ஷகிலா சொன்னது எல்லாம் பொய்யா? உண்மையில் அன்று என்ன நடந்தது? உங்க பொண்ணு இன்னொரு பெண்ணிடம் என்ன பேசினாங்க என்று கேட்க, அதற்கு ஒரு பயில்வான் ஷகிலா வேண்டுமென்றே இந்த மாதிரி புகார் கூறுகிறார். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார் என்று சொல்ல, அதற்கு குறிப்பிட்டு பேசிய நிருபர் நான் ஒரு கேள்வி கேட்கும் போது அதை முழுவதுமாக கேட்காமல் நீங்கள் எழுந்து போக போறீங்க.

இது மாதிரி தானே எல்லா நடிகைகளின் மனநிலையும் இருக்கும். அவர்களின் அந்தரங்க விஷயத்தையும் அவர்களின் சொந்த விஷயத்தையும் நீங்கள் கூறும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அது உங்களுக்கு தப்பா தெரியலையா? என்று கேட்க பயில்வான் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு என்னுடைய பொண்ணை பார்த்து தப்பா பேசினா அந்த நடிகையின் நாக்கு அழுகி போய்விடும்.

அவங்களை பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரியும். இப்போ பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்னை பத்தி பேசி இருக்காங்க என்று அந்த நிகழ்ச்சியில் கோபமாக பேசி இருக்கிறார். அதோடு ஷகிலாவிற்கு சாபம் விட்டும் அவர் பேசியிருக்கிறார் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+