ராஜேஷுக்கு “இந்த” மன அழுத்தம் தான் அதிகமாக இருந்தது.. கடைசியாக சொன்ன வார்த்தை.. கதறி அழுத வடிவுக்கரசி
சென்னை: நடிகர் ராஜேஷ் நேற்று காலையில் உடல்நல குறைபாட்டால் காலமானார். அவருடைய நினைவுகள் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்கள் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகை வடிவுக்கரசி ராஜேஷுக்கு இருந்த மன அழுத்தம் குறித்து கதறி அழுது பேசியிருக்கிறார்.
நடிகர் ராஜேஷ் நடிகராக 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பல திறமைகள் கொண்டவர். டப்பிங் கலைஞர், சீரியல் நடிகர், ஜோதிடர் என்று பன்முகத் திறமை கொண்டு விளங்கினார். அதுபோல தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார். இந்த நிலையில் தான் நேற்று மே 29ஆம் தேதி அதிகாலை மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி சினிமா துறையை நிறைய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ராஜேஷுக்கு பிரபலங்கள் வருத்தம்
ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் ராஜேஷ்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேஷின் முதல் திரைப்படமான கன்னிப் பருவத்திலே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை வடிவுக்கரசி அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தார். பிறகு அழுதபடியே செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.
நடிகர் ராஜேஷ் மறைவு
அப்போது, நான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேசுவேன் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை. ஒழுக்கமான மனிதர் ராஜேஷ். 46 வருடம் சினிமாவில் இருந்திருக்கிறார். முதல் படத்தில் கதாநாயகியாக நான் நடித்ததில் இருந்து பத்து நாளைக்கு முன்ன பேசும் வரைக்கும் என்கிட்ட எல்லாமே சொல்லுவார். ரொம்ப டிசிப்ளின் ஆனவர். எதையும் பிளான் ஓட தான் பண்ணுவார். ஆனால் இது மட்டும் அவருக்கு எப்படி தெரியாமல் போச்சுன்னு தெரியலையே?
வடிவுக்கரசி பேட்டி
மத்தவங்களுக்கு எல்லாம் அவ்வளவு அட்வைஸ் சொல்லுவாரு. அப்படிப்பட்டவருக்கு இப்படி நடக்கும்னு தெரிஞ்சுக்காம போனாரு என்பதுதான் காலையில் இருந்து எனக்குள் ஓடிக்கிட்டே இருக்கு. இந்த நிமிஷம் வரைக்கும் கூட நம்பிக்கையே இல்லை... நான் எங்கேயுமே மைக் முன்னாடி எல்லாம் பேசவே மாட்டேன். இழந்தவர்களுக்கு தான் அவங்களோட வலி வேதனை தெரியும். ஆனால் இது ரொம்ப வலிக்குது. ரொம்ப வேதனையா இருக்கு.
வடிவுக்கரசியின் கிண்டல்
பத்து நாளைக்கு முன்னாடி என்கிட்ட பேசும்போது கூட நான் கல்யாணம் வைக்க போறேன், இன்விடேஷன் கொண்டு வரேன்னு சொன்னார். நான் கிண்டலுக்காக, "பரவாயில்லையே சார் நீங்க 75 வயசுல இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறீங்க" என்று சொன்னேன். அவர் ரொம்ப ஒழுக்கமானவர். போன பிறந்த நாளில் கூட என்னை வாழ்த்தினார். என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் நான் மறந்தால் கூட அவர் மறக்கவே மாட்டார். அவரிடம் இருந்துதான் எனக்கு முதல் போன் வரும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஃபர்ஸ்ட் டே எப்படி பழகினாரோ அதேபோலத்தான் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்.
கதறி அழுத வடிவுக்கரசி
நாங்கள் கடைசி ரெண்டு மாசத்துக்கு முன்னாடி திருச்சியில் ஒரு சித்தா ஹாஸ்பிடல் திறந்து வைக்க போன போது கூட சார் இந்த இடம் ஞாபகம் இருக்கான்னு? கேட்டேன். திருச்சி என்று சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும் சொல்லுங்கன்னு சொன்னபோது, "கன்னிப்பருவத்திலே இங்க தானே நாம நடிச்சோம்னு சொன்னாரு" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே வடிவுக்கரசி அழுதிருந்தார்.
அம்மா சொன்ன வார்த்தை
அதோடு வடிவுக்கரசி மேலும் பேசும் போது, ராஜேஷுக்கு அவருடைய தம்பி மற்றும் மகன் மீதுதான் ரொம்பவும் பயமும், பாசமும் இருந்தது. தன்னுடைய தம்பிக்கும், மகனுக்கும் வெளி உலகமே தெரியல. இவங்க இந்த உலகத்தில் எப்படி வாழ போறாங்கன்னு தெரியலையேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவங்க அம்மா இறக்கும்போது தம்பி பற்றி சொல்லிக்கிட்டு இறந்ததா கூட சொல்லி இருக்கிறார்.
குழந்தைகள் மீது பாசம்
நீதான் இவனை நல்லா பாத்துக்கணும், கடைசிவரை விட்டுவிடாதே இவனுக்கு வெளி உலகம் தெரியாதுன்னு எங்க அம்மா சொல்லிட்டு போயிட்டாங்க அதனால என்னுடைய தம்பியை நான் தான் பாத்துட்டு வரேன்னு ராஜேஷ் சொல்லி இருக்காரு. அவருக்கு மகன் மற்றும் மகள் மீது ரொம்பவும் பாசம். ஆனா இப்ப அந்த மகன் கல்யாணத்தை கூட பார்க்காம போயிட்டாரே என்று தான் ரொம்ப வருத்தமா இருக்கு என்று கதறி அழுதப்படியே வடிவுக்கரசி பேசி இருந்தார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications