அந்த உறவு என்னை உறுத்தி கொண்டே இருக்கும்..! பவதாரணி இறப்பால் உடைந்து போன வனிதா பதிவு
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவருடைய உடல்நிலை பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பவதாரணி காலமானார். இன்று அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.
பாடகி பவதாரணியின் மரண செய்தியை கேட்டு அவருடைய ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வனிதா பவதாரணி குறித்து உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோட தன்னுடைய முதல் பாடலை பவதாரணி தான் பாடினார் என்று நினைவுகளையும் பகிர்ந்து இருக்கிறார்.

மறைந்த பாடகி பவதாரணி எக்கச்சக்கமான பாடல்களை பாடி இருக்கிறார். இரண்டாயிரத்தில் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு என்ற பாடல் இவர் பாடிய சிறந்த பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்ற இவர் பாடல் பலருடைய ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தில் வரும் மெஹரசீலா என்ற பாடலையும் பவதாரணி பாடி இருந்தார்.
இந்த நிலையில் 47 வயதான பவதாரணியின் மறைவு திரை உலகினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகையும் பிக் பாஸ் 3 போட்டியாளருமான வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவதாரணியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான சில விஷயங்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் பவதாமா நீ எனக்கு வெறும் தோழி இல்லை, நீ எனக்கு சகோதரி இல்ல, ஆனால் நீ எனக்கு யார் என்பது உனக்கு தெரியும்.... நமக்குள் இருந்த உறவு எப்போதுமே நீடித்திருக்கிறது. நீயும் நானும் ஜீவாமை மிகவும் மிஸ் செய்திருப்போம். அவருக்கு என்னுடைய அன்பை கொடுத்துவிடு, நீ கடவுளின் குழந்தை, நீ இந்த உலகத்தை விட்டு பிரிந்தது என்னை அதிகமாக உலுக்கி இருக்கிறது.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்னுடைய முதல் பாடலை நீ தான் பாடினாய். அதற்குப் பிறகு பல பாடல்கள் பாடியிருக்கிறார். உன்னை மீண்டும் சந்திக்கும் வரை சிறுவயதில் நமக்குள் இருந்த உறவு என்னை உறுத்திக் கொண்டே இருக்கும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... என்று தன்னுடைய மன கஷ்டத்தை விவரித்து இருக்கிறார். அதோடு வனிதாவும் பவதாரணியும் சிறுவயதில் இருந்தே தோழிகளாக இருந்திருக்கின்றனர். வனிதா வெளியிட்ட பதிவிற்க்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications