Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த உறவு என்னை உறுத்தி கொண்டே இருக்கும்..! பவதாரணி இறப்பால் உடைந்து போன வனிதா பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவருடைய உடல்நிலை பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பவதாரணி காலமானார். இன்று அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.

பாடகி பவதாரணியின் மரண செய்தியை கேட்டு அவருடைய ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வனிதா பவதாரணி குறித்து உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோட தன்னுடைய முதல் பாடலை பவதாரணி தான் பாடினார் என்று நினைவுகளையும் பகிர்ந்து இருக்கிறார்.

Actress Vanitha condolence Ilayaraja Daughter Bhavatharani Death

மறைந்த பாடகி பவதாரணி எக்கச்சக்கமான பாடல்களை பாடி இருக்கிறார். இரண்டாயிரத்தில் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு என்ற பாடல் இவர் பாடிய சிறந்த பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்ற இவர் பாடல் பலருடைய ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தில் வரும் மெஹரசீலா என்ற பாடலையும் பவதாரணி பாடி இருந்தார்.

இந்த நிலையில் 47 வயதான பவதாரணியின் மறைவு திரை உலகினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகையும் பிக் பாஸ் 3 போட்டியாளருமான வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவதாரணியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான சில விஷயங்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் பவதாமா நீ எனக்கு வெறும் தோழி இல்லை, நீ எனக்கு சகோதரி இல்ல, ஆனால் நீ எனக்கு யார் என்பது உனக்கு தெரியும்.... நமக்குள் இருந்த உறவு எப்போதுமே நீடித்திருக்கிறது. நீயும் நானும் ஜீவாமை மிகவும் மிஸ் செய்திருப்போம். அவருக்கு என்னுடைய அன்பை கொடுத்துவிடு, நீ கடவுளின் குழந்தை, நீ இந்த உலகத்தை விட்டு பிரிந்தது என்னை அதிகமாக உலுக்கி இருக்கிறது.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்னுடைய முதல் பாடலை நீ தான் பாடினாய். அதற்குப் பிறகு பல பாடல்கள் பாடியிருக்கிறார். உன்னை மீண்டும் சந்திக்கும் வரை சிறுவயதில் நமக்குள் இருந்த உறவு என்னை உறுத்திக் கொண்டே இருக்கும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... என்று தன்னுடைய மன கஷ்டத்தை விவரித்து இருக்கிறார். அதோடு வனிதாவும் பவதாரணியும் சிறுவயதில் இருந்தே தோழிகளாக இருந்திருக்கின்றனர். வனிதா வெளியிட்ட பதிவிற்க்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+