என் பிரார்த்தனை வீண் போகல.. எனக்கு கண்ணீர் வருகிறது.. மகன் குறித்து திடீர் பதிவு போட்ட வனிதா
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகன் விஜய் ஸ்ரீ ஹரி குறித்து தன்னுடைய twitter மற்றும் insta பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய மகன் முதல் திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கும் நிலையில் தான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை, தன்னுடைய மகனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கண்ணீரோடு அந்த போஸ்டில் அவர் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பமாக விஜயகுமாரின் குடும்பம் இருந்து வருகிறது. விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவருக்கும் கடந்த ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 2000 ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆகாஷ் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் வனிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு இவர்களுக்குள் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாக மகன் ஸ்ரீஹரியை வனிதா பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஸ்ரீஹரி இப்போது அப்பாவின் அரவணைப்பிலும் தாத்தாவின் கண்காணிப்பிலும் இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் நீங்கள் வனிதாவின் மகன் தானே என்று கேட்ட கேள்விக்கு நான் ஆகாஷின் மகன் என்று பதில் கொடுத்திருந்தார். வனிதா மீது அவருக்கு இருக்கும் கோபத்தை அந்த கருத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படத்தில் ஸ்ரீஹரி நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே சினிமா பற்றிய படிப்பை லண்டனில் ஸ்ரீஹரி முடித்து இருக்கும் நிலையில் அடுத்ததாக நடிக்கலாமா? அல்லது திரைப்படத்தை இயக்கவா? தயாரிக்கவா? என்ற குழப்பத்தில் இருந்திருக்கிறார். இது பற்றி விஜயகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் நான் எப்போதும் குழப்பமாக இருக்கும்போது ரஜினிகாந்த் இடம் தான் ஆலோசனை கேட்பேன். அந்த மாதிரி தான் தன் பேரன் விஷயத்திலும் என்ன பண்ணலாம் என்று கேட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அப்போது ரஜினியும் ஸ்ரீஹரியை அழைத்து அவருடைய ஆசையை கேட்டார். அப்போது தன்னுடைய மகனுக்காக பிரபுசாலமனுடன் ஆகாஷ் ஏற்கனவே பேசி இருக்கிறார். அவரிடம் ஒரு கதை இருப்பதாகவும் விஜயகுமார் ரஜினி இடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் பிரபு சாலமன் இயக்கம் என்றால் அருமையாக இருக்கும் கதை என்ன என்று கேட்க விஜயகுமாருக்கு கதை என்ன என்பது பற்றி தெரியாததால் பிரபு சாலமனை ரஜினிகாந்திடம் கதை சொல்ல சொல்லியிருக்கிறார்.
ரஜினிகாந்த் போனிலேயே வனிதாவின் மகனுக்காக கதை கேட்டிருக்கிறார். பிறகு கதை பிடித்து போய் இருக்கிறது. ஒரு சிங்கமும்... ஒரு ஹீரோவும்.. நல்ல கதை. இதை பண்ணு என்று கூறினார் என்று சமீபத்தில் விஜயகுமார் இது பற்றி பேசி இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட வனிதா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய மகன் குறித்து பாராட்டி ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.
அதில் நான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை என்னுடைய மூத்த மகன் நடிகனாக மாறி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் என்று விஜய் ஸ்ரீஹரியை டேக் செய்து இருக்கிறார். அதோடு என்னுடைய மகனுக்காக கதை கேட்டு ஆசிர்வாதம் செய்த ரஜினி அங்கிளுக்கு ரொம்பவும் நன்றி. என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது. அவன் இன்னும் மேலும் அதிகமாக வளர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல இன்னொரு பதிவில் என்னுடைய மகன் கதாநாயகனாக மாறியிருக்கிறார் எனக்கு இதுவரைக்கும் ஆதரவு தந்த செய்தி சேனல்களும், ஊடகங்களும், ரசிகர்களும், என்னுடைய தம்பி தங்கைகளும் என்னுடைய மகனுக்கும் அதுபோல ஆதரவு தர வேண்டும் என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார். இதற்கு பலரும் வனிதாவை பாராட்டி அவருடைய மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications