பிக்பாஸிலிருந்து அனந்த் வெளியேற்றம்... கட்டிபிடித்து கதறி அழுத மும்தாஜ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அனந்த வைத்தியநாதன் வெளியேறிய போது அவரை மும்தாஜ் கட்டி பிடித்து கதறி அழுதார்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அனந்த் வைத்தியநாதன் வெளியேறிய போது அவரை மும்தாஜ் கட்டி பிடித்து அழுதார்.இதுபோல் டேனி உள்ளிட்டோரும் அழுதனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் பொழுது போக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. தற்போது 3 வாரங்கள் கடந்த ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களுள் கடந்த வாரம் மமதி சாரி வெளியேற்றப்பட்டார்.
பார்ப்பதற்காக...
பிக்பாஸ் முதல் சீசனை போல் இந்த சீசன் சுவாரசியமாக இல்லை என்பது பார்வையாளர்கள் கருத்து. இருந்தாலும் பொழுது போக்கு நிகழ்ச்சி என்பதற்காகவும் என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவும் இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்கின்றனர்.
குடும்ப சண்டை
இன்னும் சிலரோ வார இறுதி நாட்களில் மட்டும் பார்க்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மகத், ஷாரிக் போடும் லூட்டிகளால் மக்கள் கடுப்படைந்துள்ளனர். மேலும் பாலாஜி, நித்யா போடும் குடும்ப சண்டையை காண முடியாமல் மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
மக்கள் ஷாக்
எனவே இந்த வாரம் இவர்களில் யாராவது வெளியேற்றப்படுவார்கள் என்று உற்சாகமாக நிகழ்ச்சியை கண்டவர்கள் ஷாக் ஆகிவிட்டனர். மேற்கண்டவர்களுக்கு பதிலாக அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறும் போது போட்டியாளர்கள் உணர்ச்சிவயமாக காணப்பட்டார்.
கட்டிப்பிடி வைத்தியம்
ஒரு கட்டத்தில் டேணி அவரை கட்டி பிடித்து அழுதுவிட்டார். இதைத் தொடர்ந்து மும்தாஜும் அவரை கட்டி பிடித்து அழுதார். இதுபோல் மும்தாஜ் மமதி சாரி வெளியேறிய போதும் அவரை கட்டிப் பிடித்து அழுதார். பாலாஜி மற்றும் நித்யா ஆகியோர் அனந்த் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அப்போது அவர்களுக்கு அனந்த் புத்திமதிகளை வழங்கினார். முதல் சீசனை போல் இந்த சீசனிலும் கட்டிப்பிடி வைத்தியம் தொடர்கிறது.
முதல் ஆளாக பொன்னம்பலத்தை சிறையில் தள்ளிய பிக் பாஸ்