அண்ணாச்சி செய்த செயலால் பொங்கி எழுந்த எதிர் அணியினர்... விளையாட்டே மாறி போச்சு
சென்னை: ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாச்சி செய்த செயல் விளையாட்டை மாற்றி விட்டது.
அண்ணாச்சி பிள்ளையார் சுழி போட்டதும் எதிரணியினர் ஏடாகூடமாக விளையாட்டை முடித்து விட்டார்கள்.
பிரச்சனையை தொடங்கிய அண்ணாச்சி அமைதியாக மாறிவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

விளையாட்டு மாறிப்போச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில நேரங்களில் விளையாட்டு விபரீதம் ஆக மாறிவிடுகிறது. தற்போதுகூட செண்பகமே செண்பகமே என்னும் டாஸ்கில் எதார்த்தமாக அண்ணாச்சி செய்த செயல் விளையாட்டை மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் குழப்பி விட்டது. அட என்ன இவர் இப்படி எல்லாம் பண்ணி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்களே தற்போது ஃபீல் பண்ணி வருகின்றனர்.

பிக்பாஸில் இமான் அண்ணாச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் டாப்பில் இருக்கும் போட்டியாளர்கள் நொடிப்பொழுதில் சரிந்து விடுவதும், கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் பல நேரங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுவதும் பொதுவான ஒன்றுதான். இது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் தற்போது ஐந்தாவது சீசனிலும் நடைபெற்று வருகிறது. இதில் பலருக்கும் பரிச்சயமான காமெடி நடிகராக இருக்கும் இமான் அண்ணாச்சி ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

ரசிகர்களை புலம்ப வைக்கும் கருத்து
இமான் அண்ணாச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். இவருடைய வயது மற்றும் மெச்சூரிட்டி காரணமாக இவர் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும் என்று ரசிகர்கள் ரொம்பவே நம்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் இவர் செய்யும் ஒரு சில செயல்கள் ரசிகர்களை குழப்பம் அடையச் செய்திருக்கிறது. இசைவானியிடம் இவர் நடந்து கொள்ளும் முறையாக இருந்தாலும் சரி, ஒரு சில நேரங்களில் கருத்து தெரிவிக்கிறேன் என்று இவர் ஏதாவது பேசி விடுவதால் அது பிரச்சினையை கிளப்பி விடுகிறது. பிறகு மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனையை அப்படியே முடித்து விடுகிறார்.

அணிக்கு வினையாக மாறிடிச்சு
நேற்றைய டாஸ்க் நிகழ்ச்சியில் கூட பொம்மை கறவை மாடில் இருந்து அனைத்து போட்டியாளர்களும் பாலை பிடித்து தங்களுடைய அணிக்கு சார்பாக இருக்கும் பெட்டிக்குள் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போது, இவர் எதிரணியில் இருக்கிற ஒரு பாட்டிலை எடுத்து வந்துவிட்டார். இதை பார்த்த எதிரணியினர் இவர் அணியின் மீது தங்களுடைய கோபத்தை முழுமையாக காட்டி விட்டனர். அதுவரைக்கும் கஷ்டப்பட்டு போட்டிபோட்டு
பால் டப்பாக்களை சேகரித்துக்கொண்டு வைத்திருந்ததையெல்லாம் எதிரணியில் இருந்த நிரூப் உதவியோடு போட்டியாளர்கள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டனர். இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் அண்ணாச்சி ஆரம்பித்து வைத்த விளையாட்டு அவர் அணிக்கு விணையாக மாறிவிட்டது என்று கூறி வருகின்றனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications