Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வேலையை உடனே நிறுத்திருங்க.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்புவதை பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் நிறுத்த வேண்டும்; இல்லை என்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் மற்றும் சமூக ஊடகங்களில் அநாகரிகமான வார்த்தைகள், பெண்களை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

Artistes Association Warns Bayilvan Ranganathan Against Defamation Threatens Legal Action

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சமுதாயத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை இழிவுபடுத்தும் வகையிலான செயல்களில் பயில்வான் ரங்கநாதன் ஈடுபட்டு வருகிறார் என சினிமா உலகினர் மத்தியில் புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும் பணியிட பாதுகாப்பை உறுதி செய்லதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதும் இன்றியும் பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்னும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கின் கடுமையை உணர்ந்து இனி அவ்விதம் அவதூறாக பதிவிட மாட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம். அந்த உறுதி மொழியில் இருந்து அவர் சற்றும் தவறக்கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில், அந்த நபருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

Artistes Association Warns Bayilvan Ranganathan Against Defamation Threatens Legal Action

இதைத் தொடர்ந்து சற்று காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில், சமீப காலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலர் எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் வாரி இறைத்து வருகின்றனர்.

அவ்விதம் அவதூறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கை மனதில் கொண்டு உன அவர்களது இந்த சட்ட விரோத செயலை. நிறுத்த வேண்டும் அவ்விதம் நிறுத்தத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த முறையை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் முயமாக தென்னித்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது.

இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்." என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+