Arundhathi serial: பேய் கூட கல்யாணம் முதலிரவு... ஒரே தொல்லையா இருக்கே!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் திகில், மர்மம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ரொம்ப சிறு பிள்ளைத்தனமாக கதை சென்று கொண்டு இருக்கிறது.
தெய்வானை முருகன் அருள் பெற்றவள், முருகன் மீது பக்தி அதிகம். அதனால், ஈஸ்வரி அம்மா வீட்டை தாக்க வரும் தீய சக்தியால் தெய்வானையை அணுக முடியாது என்று சண்முகத்துக்கு அவளை கல்யாணம் செய்து வைக்கறாங்க.
ஆனால், அந்த அருந்ததி பேய் தெய்வானையை தோழியாக்கி அவள் புருஷனையே உரிமையாக்கி கொண்டு, தெய்வானையை வீட்டை விட்டு விரட்ட பார்க்குது.

தெய்வானை அருந்ததி
தெய்வானைக்குள் அருந்ததி ஆவி புகுந்து கொண்டு இருந்தபோது, அருந்ததியின் புருஷன் சண்முகம் ரொமான்ஸ் செய்ததில், பேய்க்கு சண்முகத்துடன் காதல் வாழ்க்கை வாழ ஆசை வந்துருது. அதையும் கொஞ்சம் திரித்து தெய்வானையிடம் கூறி விடுகிறாள். அதாவது தனக்கும் மற்ற பெண்களைப் போல கல்யாணம் செய்துக்க ஆசையா இருக்கு., கல்யாணம் செய்துகிட்டால்தான் என் ஆத்மா சாந்தி அடையும்., நீதான் உதவி செய்யணும் என்று.

யார் செய்துக்குவா?
என்ன சொல்றே அருந்ததி..பேயான உன்னை யாரு கல்யாணம் செய்துக்குவான்னு தெய்வானை கேட்க, சண்முகத்துக்குத்தான் என்னை பற்றி தெரியுமே.. அவனை சம்மதிக்க வைன்னு சொல்லி சரி,, குடும்ப நன்மைக்கு என்று இவளும் சண்முகத்திடம் பேசுகிறாள். என்னது பேயை நான் கல்யாணம் பண்ணிக்கறதா...அறிவிருக்கா உனக்குன்னு சண்முகம் கெஞ்சியும் தெய்வானை கேட்கலை.

வித்தியாச கல்யாணம்
எரிஞ்சு போன வீடு கல்யாண மண்டபம், தேங்காவுக்கு பதில் கருந்தேள்கள், பூ மாலைக்கு பதில் கருப்பு மாலை..அக்னிக்கு பதில் சாம்பல் என்று விசித்திரமான இடத்தில் வித்தியாசமாக பேய்க்கும் மனுஷனுக்கும் கல்யாணம் நடக்குது. சரி, அருந்ததி உன் ஆசை நிறைவேறிடுச்சு... நீ கெளம்புன்னு சொன்னா மாட்டேன்னு அடம் பிடிக்குது.

உனக்கு என்ன வேலை?
கல்யாணம் ஆன நிலையில், சண்முகத்துடன் முதலிரவு வேண்டும் என்று அடம் பிடிக்குது. சண்முகம் கனவில் கூட உன்னை என்னால் அப்படி நினைச்சு பார்க்க முடியாதுன்னு வாதம் செய்துகிட்டு இருக்க , தெய்வானையை வெளியில் தள்ளிவிட்டு, என் பெட் ரூம்.உனக்கு இங்கே என்ன வேலைன்னு பேய் கேட்குது. தெய்வானையை வெளியே அனுப்பிருது.புருஷனை பார்க்க விட மாட்டேங்குது.
ஓடறா முருகா முருகான்னு கூப்பிட்டுக்கிட்டு அழகன் முருகனிடம்!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications