Sembaruthi Serial: கடைசியில் அகிலாண்டேஸ்வரி சொன்ன மாதிரி ஆகிப்போச்சே!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி அம்மா சொன்ன மாதிரி, வொர்க்கர்ஸ்குள்ள பிளவு உண்டாக்கிருச்சு. இப்போ பார்வதி என்ன பேசப் போகிறாள்?
மார்க்கெட்டிங் டீமில் சேல்ஸ் இன்கிரிமெண்ட் செய்திருப்பதாக சொல்லி பார்ட்டி கேட்கிறார்கள்.
மார்க்கெட்டிங் டீம் மட்டும் இதற்கு பொறுப்பு இல்லை, சேல்ஸ் டிபார்ட் மென்ட், புரடக்ஷன் டிபார்ட்மென்ட் இவர்களுக்கு என்ன பதில் என்று அகிலாண்டேஸ்வரி அம்மா கேட்டது இப்போது உண்மையாகிவிட்டது.
குட்வில் அம்பாசிடர்
பார்வதி குட்வில் அம்பாசிடர் பொறுப்பு ஏற்ற நிலையில், கம்பெனியின் மார்க்கெட்டிங் டீம் பார்வதியை வந்து சந்தித்து, இந்த முறை சேல்ஸில் ரொம்ப இன்கிரீஸ் செய்துள்ளதாகவும், இதற்கு பார்ட்டி வேண்டும் என்றும் பார்வதியிடம் கேட்கிறார்கள்.
Roja Serial, Chandralekha Serial: இரண்டு சீரியல்... ஒரே பெயர்... ஒரே ரோல்...ஒரே சானல்...!
அகிலாண்டேஸ்வரி பார்வதி
பார்வதி இதை அகிலாண்டேஸ்வரியிடம் சொல்ல, மார்க்கெட்டிங் டீம் இதை தனியாக சாதிச்சு இருக்க முடியாதே பார்வதி. சேல்ஸ், புரடக்ஷன் டீம் இல்லாமல் இதை எப்படி அவங்கள் சாதிச்சு இருக்க முடியும். இவங்களை ஊக்கப் படுத்தினால் அவங்க நாம ஒண்ணும் செய்யலைன்னு நினைச்சுக்க மாட்டாங்களான்னு கேட்கறாங்க.
மூன்று தரப்பினர்
ஒரு வழியா மூன்று தரப்பினருக்கும் பார்ட்டி வைக்க முடிவெடுத்து ஹோல் கம்பெனிக்கும் பார்ட்டி ஆரம்பிச்சு வச்சுட்டு அகிலாண்டேஸ்வரி அம்மா கிளம்பறாங்க. நடுவில் நந்தினியோட ஆள் பார்ட்டியில் புகுந்து குட்டையை குழப்பி ஸ்ட்ரைக் செய்யம் அளவுக்கு பிரச்சனையை கிளப்பி விட்டுட்டறா.
சேல்ஸ் புரடக்ஷன்
மார்க்கெட்டிங், சேல்ஸ், புரடக்ஷன் இதில் யாருக்கு முதலிடம் என்று கேட்டு ஸ்ட்ரைக் செய்யும் அளவுக்கு நிலைமை போய்விடுகிறது. கடைசியில் அகிலாண்டேஸ்வரி சொன்ன மாதிரிதான் நடந்துவிடுகிறது. ஸ்ட்ரைக் செய்யும் இடத்துக்கு அகிலா, பார்வதி, மித்ரா மூவரும் போகிறார்கள். பார்வதி நான் போய் பேசுகிறேன்.. நான்தானே பிரச்சனைக்கு காரணம் என்று பேசப் போகிறாள்.
என்னதான் பேசப்போகிறாள் பார்வதி.. இன்று இரவு ஜீ தமிழ் டிவி பாருங்கள்