Ayudha Ezhuththu Serial:இந்த சப் கலெக்டர் காளி அம்மா குட்ட குட்ட குனியறாய்ங்களே... ஏன்?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் திவ்யா, மாமியார் வீட்டில் குட்ட குட்ட குனிஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதுவும் மாமியார் அநியாயத்துக்கு அடாவடி பண்றவங்க. எதுக்கு இந்த கலெக்டர் குட்ட குட்ட குனியனும்?
கலெக்டர் எப்போது தன் அதிகாரத்துக்கு தக்கபடி வாழப் போறாங்கன்னு சீரியல் பார்க்கறவங்க எதிர்பார்க்கும்படி சீரியலை கொண்டு போறாங்களாம். அதனாலதான் இன்னும் இன்னும் என்று சீரியலை இப்படியே நீட்டிச்சுகிட்டே இருக்காங்க போல!
கலெக்டர் காளி அம்மா மருமகளாகிட்ட பின்னர் கலெக்டர் வேலையும் பார்க்கறதில்லை. அதோடு அவங்க செய்யும் அநியாயத்தை சகிச்சுக்கிட்டு வீட்டிலேயே இருக்காங்க.
ஒரு சீரியல் ஒரு நாட்
விஜய்டிவியின் சீரியல்களில் ஒரு நாட் வச்சுக்கிட்டு, ஒரு சீரியலா பயணிப்பாங்க. அப்படித்தான் இருக்குது இந்த ஆயுத எழுத்து சீரியலும், இதில் காளி அம்மாவா நடிகை மவுனிகா நடிச்சு இருக்காங்க. ஒரு அதிகாரம் மிக்க கிராமத்து பெண்மணியா நடிச்சு இருக்கும் மவுனிகாவின் கெட்டப் கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருக்கு. ஆனால், இவருக்கான நடிப்பு என்று பார்த்தால், தனக்கு மருமகளாகிவிட்ட கலெக்டரை எப்போதும் பழி வாங்கிக்கிட்டே இருப்பதுதான்.
kodeeswari: ஸ்கூட்டி வாங்கி அதுல என் அப்பாவை உட்கார வச்சு ஓட்டணும்...!
சப் கலெக்டர் இந்திரா
சப் கலெக்டர் இந்திரவாக நடிகை சரண்யா நடிக்கிறார். இந்த சப் கலெக்டர், சக்தி, காளி அம்மாள் மகன் என்று தெரியாமலே காதலிப்பதும், அதே காளி அம்மா செய்யும் அநீதிக்கு எதிராக களம் இறங்குவதும் என்று ஆரம்பத்தில் செய்து வருகிறார். சக்தி யார் என்று தெரியாமலே அவரை கல்யாணம் செய்துகொள்ள மணமேடை வரை சென்று தாலி கட்டிய பின்னர்தான் சக்தி காளி அம்மாவின் மகன் என்று தெரிகிறதாம். நாட்டில் இப்படி சப் கலெக்டர் இருந்தால் என்னாகும்?
எப்படி இருந்த சப்கலெக்டர்
எப்படி இருந்த சப்கலெக்டர் இப்படி ஆகிட்டாங்க என்று நினைக்கும்படி காளி அம்மா குட்ட குட்ட குனியும் சப் கலெக்டராக இந்திரா மாறிப்போறாங்க. எப்போதும் வீட்டில் இருந்துகொண்டு, காளி அம்மா, தனக்கும் தனது குடும்பத்துக்கும் செய்யும் அநீதிகளை பொறுத்துக்கொண்டு வெறுமனே கண்ணீர் விடும் கதாபாத்திரமாக மாறிப் போகிறார் சப் கலெக்டர்.
சப்கலெக்டரா? மருமகளா?
சப்கலெக்டரா மருமகளா என்று வரும்போது, அங்கு மருமகள்தான் நிக்கறாங்க போலும். எல்லா பணத்தையும் செலவு செய்ய வைப்பதும், அப்பா அம்மா பணத்தை திருட்டு போக வைப்பதும் என்று எல்லா வேலைகளையும் மாமியார் காளி அம்மா செய்தால், அத்தையையும் பொறுத்துப் போகும் சப் கலெக்டர் இந்திரா, அடிக்கடி கண்ணீர் விடுகிறார். என்றைக்கு கலெக்டராக இந்திரா வீறு கொண்டு எழுவார் என்றே கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சீரியலின் எதிர்பார்ப்பு கதையாக இருக்கிறது.