ஜீ தமிழ் ‘அண்ணா’ சீரியலில் என்ட்ரியாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோ.. மாறிய கதைகளம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று அண்ணா சீரியல்.
திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஷண்முகம் என்ற கதாபாத்திரத்தில் மிர்ச்சி செந்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்து வருகிறார். மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஸாரி அண்ணா சீரியலில் வைகுண்டம் என்ற கதாபாத்திரத்தில் சண்முகத்துக்கு அப்பாவாக நடிக்கிறார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து மேலும் ஒரு நடிகர் அண்ணா சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விகாஸ் தான்.
இவர் வரும் நாட்களில் அண்ணா சீரியலில் அறிவழகன் என்ற கதாப்பாத்திரத்தில் வாத்தியாராகவும் ரத்னாவின் பள்ளி பருவ காதலனாகவும் நடிக்க இருக்கிறார். இவருடைய காட்சிகள் இன்று முதல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரத்னா தன்னுடைய கணவரின் உண்மையான சுய ரூபத்தை புரிந்து அவரை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறார். அவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழும் ரத்னாவிற்கு வாத்தியாராக வரும் அறிவழகனால் நன்மைகள் ஏற்பட போகிறதா? அல்லது பிரச்சனைகள் ஏற்படப் போகிறதா என்பது இனிவரும் எபிசோடில் தெரியவரும்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் பல புரட்சிகரமான செயல்கள் நடந்து இருக்கிறது. கணவன் வீட்டில் கொடுமைகள் நடந்தால் அதில் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு வாழ வேண்டும் என்று இல்லாமல் துணிச்சலாக தாய் வீட்டுக்கு வரவேண்டும், அதை பெண் வீட்டினரும் சோகத்தோடு அவர்களை குறை சொல்லாமல் மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என்பதற்காக இந்த சீரியலில் பல காட்சிகள் காட்டப்பட்டன.

அதுபோல ரத்னாவிற்கு மறு திருமணம் செய்து வைப்பதற்காக சண்முகம் யோசிக்க போகிறாரா? என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனாலும் இனி அறிவழகனாக வரும் விகாஷின் என்ட்ரியால் இந்த சீரியலில் பல மாற்றங்கள் நடக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications