Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோபி போலவே மாறிய செழியன்.. ராதிகா கேள்வியால் அதிர்ச்சியில் பாக்கியா.. விறுவிறுப்பின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கான எபிசோடு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

அதில் இனியா விசயத்தில் ராதிகா கோபியிடம் தன்னுடைய கோபத்தை காட்ட கோபி இனியாவிற்கு அதிர்ச்சியான பதிலை கொடுக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 28th Episode full update

அதே நேரத்தில் செழியன் மாலினியிடம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மயூ வயதுக்கு வந்ததால் நாளைக்கு பங்க்ஷன் பண்ணனும் அதனால இனியா கூட ட்ரிப்புக்கு போக வேண்டாம் என்று ராதிகா சொல்ல, அதைக் கேட்டு கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு ராதிகா ட்ரிப் போனால் அப்படியே போயிடுங்க என்று திட்ட கோபி என்ன செய்வது என்று யோசிக்கிறார்.

பிறகு இனியாவுக்கு போன் செய்து மையூ வயதுக்கு வந்து விட்ட விஷயத்தை சொல்லி ட்ரிப் போக முடியாது ட்ரிப் ஒரு வாரம் தள்ளி வைப்போமா? என்று கேட்க, இனியா அதிர்ச்சி அடைந்து அவங்க சொல்ற டைமுக்கு தான் நாம போக முடியும். நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் போக முடியாது என்று சொல்கிறார். பிறகு கோபி, நீ நாளைக்கு ட்ரிப் போறதுக்கு நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் நான் ட்ரிப்புக்கு போகல என்று சொல்ல, அதற்கு ராதிகா நீங்க போகாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது என்று திட்டி விட்டு விட்டு போகிறார். பிறகு கோபி செழியனுக்கு போன் போட்டு இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக முடியுமா? என்று கேட்க, அப்போது செழியன் மாலினி உடன் மது அருந்தி கொண்டு இருப்பதால் தன்னால் போக முடியாது. ஆபீஸ்ல லீவ் தர மாட்டாங்க என்று பொய் சொல்லி விட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 August 28th Episode full update

அதைத்தொடர்ந்து வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது இனியா நடந்த விஷயத்தை பற்றி சொல்ல, ஈஸ்வரி கோபியை திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு எழில் வந்ததும் இனியாவை கூட்டிட்டு போக முடியுமா? என்று அனைவரும் கேட்க, அதற்கு எழில் எனக்கு இரண்டு நாள் சூட்டிங் இருக்கு அது முடிச்சிட்டு போவோமா? என்று கேட்க அப்படி எல்லாம் போக முடியாது என்று இனியா கோபப்படுத்தோடு சொல்ல எல்லோரும் இனியாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.

பிறகு பாக்கியாவும் எழியனும் இனியா ட்ரிப்புக்கு போகவில்லையே அதனால அவ கவலையாய் இருக்கா அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, பிறகு செழியனுக்கு போன் பண்ணி இனியாவை கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க, அப்போது செழியன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு போக முடியாது என்று சொல்லிவிட பாக்கியா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+