கோபி போலவே மாறிய செழியன்.. ராதிகா கேள்வியால் அதிர்ச்சியில் பாக்கியா.. விறுவிறுப்பின் உச்சம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கான எபிசோடு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் இனியா விசயத்தில் ராதிகா கோபியிடம் தன்னுடைய கோபத்தை காட்ட கோபி இனியாவிற்கு அதிர்ச்சியான பதிலை கொடுக்கிறார்.

அதே நேரத்தில் செழியன் மாலினியிடம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக காணலாம்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மயூ வயதுக்கு வந்ததால் நாளைக்கு பங்க்ஷன் பண்ணனும் அதனால இனியா கூட ட்ரிப்புக்கு போக வேண்டாம் என்று ராதிகா சொல்ல, அதைக் கேட்டு கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு ராதிகா ட்ரிப் போனால் அப்படியே போயிடுங்க என்று திட்ட கோபி என்ன செய்வது என்று யோசிக்கிறார்.
பிறகு இனியாவுக்கு போன் செய்து மையூ வயதுக்கு வந்து விட்ட விஷயத்தை சொல்லி ட்ரிப் போக முடியாது ட்ரிப் ஒரு வாரம் தள்ளி வைப்போமா? என்று கேட்க, இனியா அதிர்ச்சி அடைந்து அவங்க சொல்ற டைமுக்கு தான் நாம போக முடியும். நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் போக முடியாது என்று சொல்கிறார். பிறகு கோபி, நீ நாளைக்கு ட்ரிப் போறதுக்கு நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் நான் ட்ரிப்புக்கு போகல என்று சொல்ல, அதற்கு ராதிகா நீங்க போகாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது என்று திட்டி விட்டு விட்டு போகிறார். பிறகு கோபி செழியனுக்கு போன் போட்டு இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக முடியுமா? என்று கேட்க, அப்போது செழியன் மாலினி உடன் மது அருந்தி கொண்டு இருப்பதால் தன்னால் போக முடியாது. ஆபீஸ்ல லீவ் தர மாட்டாங்க என்று பொய் சொல்லி விட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது இனியா நடந்த விஷயத்தை பற்றி சொல்ல, ஈஸ்வரி கோபியை திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு எழில் வந்ததும் இனியாவை கூட்டிட்டு போக முடியுமா? என்று அனைவரும் கேட்க, அதற்கு எழில் எனக்கு இரண்டு நாள் சூட்டிங் இருக்கு அது முடிச்சிட்டு போவோமா? என்று கேட்க அப்படி எல்லாம் போக முடியாது என்று இனியா கோபப்படுத்தோடு சொல்ல எல்லோரும் இனியாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.
பிறகு பாக்கியாவும் எழியனும் இனியா ட்ரிப்புக்கு போகவில்லையே அதனால அவ கவலையாய் இருக்கா அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, பிறகு செழியனுக்கு போன் பண்ணி இனியாவை கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க, அப்போது செழியன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு போக முடியாது என்று சொல்லிவிட பாக்கியா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications