கோபி போலவே மாறிய செழியன்.. ராதிகா கேள்வியால் அதிர்ச்சியில் பாக்கியா.. விறுவிறுப்பின் உச்சம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கான எபிசோடு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் இனியா விசயத்தில் ராதிகா கோபியிடம் தன்னுடைய கோபத்தை காட்ட கோபி இனியாவிற்கு அதிர்ச்சியான பதிலை கொடுக்கிறார்.

அதே நேரத்தில் செழியன் மாலினியிடம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக காணலாம்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மயூ வயதுக்கு வந்ததால் நாளைக்கு பங்க்ஷன் பண்ணனும் அதனால இனியா கூட ட்ரிப்புக்கு போக வேண்டாம் என்று ராதிகா சொல்ல, அதைக் கேட்டு கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு ராதிகா ட்ரிப் போனால் அப்படியே போயிடுங்க என்று திட்ட கோபி என்ன செய்வது என்று யோசிக்கிறார்.
பிறகு இனியாவுக்கு போன் செய்து மையூ வயதுக்கு வந்து விட்ட விஷயத்தை சொல்லி ட்ரிப் போக முடியாது ட்ரிப் ஒரு வாரம் தள்ளி வைப்போமா? என்று கேட்க, இனியா அதிர்ச்சி அடைந்து அவங்க சொல்ற டைமுக்கு தான் நாம போக முடியும். நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் போக முடியாது என்று சொல்கிறார். பிறகு கோபி, நீ நாளைக்கு ட்ரிப் போறதுக்கு நான் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் நான் ட்ரிப்புக்கு போகல என்று சொல்ல, அதற்கு ராதிகா நீங்க போகாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது என்று திட்டி விட்டு விட்டு போகிறார். பிறகு கோபி செழியனுக்கு போன் போட்டு இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக முடியுமா? என்று கேட்க, அப்போது செழியன் மாலினி உடன் மது அருந்தி கொண்டு இருப்பதால் தன்னால் போக முடியாது. ஆபீஸ்ல லீவ் தர மாட்டாங்க என்று பொய் சொல்லி விட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது இனியா நடந்த விஷயத்தை பற்றி சொல்ல, ஈஸ்வரி கோபியை திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு எழில் வந்ததும் இனியாவை கூட்டிட்டு போக முடியுமா? என்று அனைவரும் கேட்க, அதற்கு எழில் எனக்கு இரண்டு நாள் சூட்டிங் இருக்கு அது முடிச்சிட்டு போவோமா? என்று கேட்க அப்படி எல்லாம் போக முடியாது என்று இனியா கோபப்படுத்தோடு சொல்ல எல்லோரும் இனியாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.
பிறகு பாக்கியாவும் எழியனும் இனியா ட்ரிப்புக்கு போகவில்லையே அதனால அவ கவலையாய் இருக்கா அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, பிறகு செழியனுக்கு போன் பண்ணி இனியாவை கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க, அப்போது செழியன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு போக முடியாது என்று சொல்லிவிட பாக்கியா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications