பாக்கியாவால் தெருவுக்கு வந்த கோபி.. அவமானப்படுத்தும் ராதிகா.. எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பெயருக்கு வீடு மாறிவிட்டதால் கோபி கடும் கோபத்தில் இருக்கிறார்.

அதே நேரத்தில் கோபியும் ராதிகாவும் ரோட்டில் நிற்கும்போது பாக்யா வீட்டில் புதிதாக மாட்டப்படும் போர்ட் பார்த்து கோபி மேலும் கோபமடைகிறார்.

இதனால் பாக்கியவை பழி வாங்குவதற்காக ராதிகா ஆபீஸில் கேண்டீன் விஷயத்தில் மிரட்டுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 July 15th episode full update Gopi came to the street with Baakiya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 15 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபி பெயரில் இருக்கும் வீட்டை பாக்கியா பெயரில் மாற்றுவதற்காக எழில், ராமமூர்த்தி, பாக்யா, கோபி என எல்லோரும் ரிஜிஸ்டர் ஆபீஸில் காத்திருக்கின்றனர். பிறகு கோபி பாக்கியாவின் பெயரில் வீடு மாறுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பாக்யா ரெஜிஸ்டர் ஆபீஸில் வைத்தும் இப்போது கூட உங்க பெயருக்கு பத்திரத்தை மாத்திரலாம் மாமா என்று சொல்ல, அதற்கு ராமமூர்த்தி பாக்யாவை திட்ட பிறகு வேறு வழி இல்லாமல் பாக்கியா வீடு தன்னுடைய பெயருக்கு மாறுவதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இந்த நிலையில் பாக்கியா பெயருக்கு மாற்றி கொடுப்பதற்கு விருப்பமே இல்லாமல் கோபி கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.

பிறகு ரிஜிஸ்டர் முடிந்து வெளியே வந்ததும் எழில் கோபி இடம் இனிமேல் அந்த வீட்டுக்கும் உங்களுக்கு சம்பந்தம் இல்லை. நீங்கள் அங்கே வரக்கூடாது என்று மிரட்டி விட்டு போகிறார். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் எழில் தான் வாங்கி வைத்திருந்த பாக்கியலட்சுமி என்று போர்டு எழுதப்பட்ட போர்டை வாசலில் மாட்டுகிறார்.

அந்த நேரம் தெருவிற்கு வந்த ராதிகாவும் கோபியும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இவர்கள் இருவரையும் பார்த்த பாக்கியா இவர்களை மேலும் வெறுப்பேத்துவதற்காக போர்டு பக்கத்தில் நின்று போட்டோ எடுக்கிறார். இதை பார்த்து கோபி கடுப்பாகி சண்டைக்கு போக முயல, ராதிகா வேண்டாம் என்று தடுத்து வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அமிர்தாவின் அப்பா அம்மா வர அவர்களிடம் நலம் விசாரித்து கொண்டிருக்கும் போது ராமமூர்த்தி எழிலுக்கு போன் போட்டு அவரை வரச் சொல்லி கூப்பிடுகிறார். அதை தொடர்ந்து கேண்டினில் ராதிகா தோசை கேட்டு காத்து இருக்க செல்வி தோசையை அடுத்த டேபிளுக்கு மாற்றி கொடுத்து விடுகிறார்.

இதனால் கடுப்பான ராதிகா அங்கேயே கத்துகிறார். அதோடு நான் வீட்டை விட்டு எப்போ போவேன்னு நீங்க நினைச்சுட்டு இருந்தீங்க தானே..? நீங்களும் எண்ணிக்கோங்க உங்களையும் இந்த கேண்டினை விட்டு சீக்கிரமா வெளிய அனுப்பாமல் விடமாட்டேன் என்று சபதம் போட்டு விட்டு செல்கிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+