பழனிச்சாமி வீட்டுக்கு குடும்பத்தோடு போன பாக்கியா..அமிர்தாவுக்கு கிடைத்த அதிர்ச்சி..ஏமாற்றத்தில் கோபி
சென்னை: பழனிச்சாமியின் அம்மாவின் பிறந்தநாளுக்கு பாக்கியா தன்னுடைய குடும்பத்தோடு சென்று இருக்கிறார்.
பிறந்தநாள் பங்க்ஷனில் அமிர்தாவின் குரலை கேட்டு அனைவரும் பாட சொல்லி அமிர்தாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
ராதிகா இந்த வீட்டை விட்டு நாம போய் விடலாமா என்று கேட்டு கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன் மே 30ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பழனிச்சாமியின் அம்மாவின் பிறந்தநாளுக்கு அவருடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் படிக்கும் நண்பர்கள் அனைவரும் வந்திருக்கின்றனர்.
அப்போது பாக்கியா மாமனார் மாமியாருடன் எழில் குடும்பத்தோடு இனியாவையும் கூட்டிக்கொண்டு வருகிறார். வீட்டை பார்த்து ராமமூர்த்தி வீடு பெரிசா இருக்கே என்று கேட்டபடி வீட்டிற்குள் வந்து ஒருவரை மாற்றி ஒருவர் நலம் விசாரித்து கொள்கின்றனர். பிறகு பழனிச்சாமி பாக்யாவின் வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தரையாக தன்னுடைய அம்மாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

செழியனும் ஜெனியும் மட்டும் வரவில்லை என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். பிறகு பாக்கியாவின் பிரண்ட் பழனிச்சாமியை பெருமையாக அவருடைய அம்மாவிடம் பேசுகின்றார். என்னுடைய காரில் ஒரு சின்ன பிரச்சனை என்று சொன்னேன் உடனே மெக்கானிக் வரவைத்து சரி செய்து விட்டார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு பழனிச்சாமியின் அம்மா பாக்யா குடும்பத்திடம் பழனிச்சாமிக்கு கல்யாணம் ஆகாதது தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கின்றார். அதற்கு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பொண்ணு பார்த்து கொண்டிருக்கும் விஷயத்தை பற்றி கூறுகின்றனர். எழில் நம் சொந்தத்தில் தான் நிறைய அலையன்ஸ் இருக்குன்னு பேசிக்கிட்டு இருந்தேம்ல என்று சொல்ல பழனிச்சாமியின் அம்மா சந்தோஷப்படுகிறார்.

பிறகு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.பிறகு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அமிர்தா பாட்டு பாடியது சூப்பராக இருந்தது என்று பழனிச்சாமி பாராட்டியபடி அமிர்தாவை பாட்டு பாட சொல்கிறார். முதலில் மறுத்த அமிர்தாவும் பிறகு பாட்டு பாடுகிறார். பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்புகின்றனர்.
அதே நேரத்தில் வீட்டில் ராதிகாவும் கோபியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ராதிகா அமைதியாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சி ஆகின்றார். பிறகு ராதிகா நாம நம்ம வீட்டுக்கு போய்டலாமா கோபி என்று கேட்க கோபி அதிர்ச்சியாகிறார். ஏற்கனவே இனியாவிடம் நான் எக்ஸாம் முடியுற வரைக்கும் இங்கிருந்து போக மாட்டேன் என்று கூறியிருக்கும் நிலையில் ராதிகா மீண்டும் வீட்டுக்கு போய்விடலாம் என்று சொன்னதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications