பாக்யாவின் லைசன்ஸை திருடிய கோபி.. பழனிச்சாமி கொடுத்த அதிர்ச்சி.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்று கோபி பாக்கியாவின் லைசென்ஸை திருடி வைத்துக்கொண்டு தன்னுடைய நண்பரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் அங்கு பழனிச்சாமியும் வந்துவிட எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா லைசென்ஸை காணவில்லை என்று ராமமூர்த்தி இடம் சொல்லி வீட்டில் இருக்கிறதா? என்று தேடிப் பார்க்க சொல்ல, ராமமூர்த்தியும் அமிர்தாவும் அவசரமாக வீட்டிற்கு கிளம்பி போகின்றனர். இதை பார்த்த கோபி இவர்கள் அவசரமாக கிளம்புவதை பார்த்தால் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று புரிந்து கொண்டு இனியாவிற்க்கு போன் பண்ணி கேட்கிறார்.

அப்போது இனியா விஷயத்தை சொல்ல அதை கேட்டு கோபி கடுப்பாகி ஈஸ்வரியிடம் ஃபோனை கொடுக்க சொல்கிறார். பிறகு ஈஸ்வரி பேசும்போது லைசன்ஸ் வீட்ல இருக்கு அதை எடுக்க உங்க அப்பா போறாரு அவர் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, அதற்கு கோபி நான் ஒரு வண்டி அனுப்பி வைக்கிறேன். அதில் நீங்களும் இனியாவும் வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து கோபி தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு பாக்யா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா போன் செய்ய, நான் அப்ப அங்க தான் வந்தேன். ஆனா இப்போ எனக்கு ஒரு சின்ன வேலை அதான் கிளம்பி போகிறேன் என்று சொல்லி சமாளித்துவிட்டு பிறகு பாக்கியா தன்னிடம் செலவுக்கு காசு இருக்கா என்று கேட்டு அவமானப்படுத்தியதை நினைத்து பார்க்கிறார்.

அப்படியே பாக்கியா வீட்டிற்கு வந்ததும் வீட்டில் யாரும் இல்லாததால் அவர் வைத்திருந்த சாவியை வைத்து ரூமை திறந்து பாக்கியாவின் லைசன்ஸை திருடிக் கொண்டு போகிறார். கோபி போன பிறகு அமிர்தா வீட்டிற்கு வந்து லைசென்ஸை தேடி பார்த்து அது எங்கேயும் கிடைக்கவில்லை என்று பாக்யாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.
அதைத்தொடர்ந்து கோபி அனுப்பி வைத்த கார் இனியாவையும், ஈஸ்வரியையும் கூட்டிட்டு அந்த காரில் வீட்டுக்கு போங்க என்று சொல்கிறார். அதே நேரத்தில் கோபி தன்னுடைய நண்பனை சந்தித்து பாக்கியாவுக்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி இப்போது பாக்கியாவை ஜெயிலில் அடைக்க போறாங்க என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு பழனிச்சாமியும் வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications