Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்யாவின் லைசன்ஸை திருடிய கோபி.. பழனிச்சாமி கொடுத்த அதிர்ச்சி.. எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்று கோபி பாக்கியாவின் லைசென்ஸை திருடி வைத்துக்கொண்டு தன்னுடைய நண்பரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 16th episode full update

அதே நேரத்தில் அங்கு பழனிச்சாமியும் வந்துவிட எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா லைசென்ஸை காணவில்லை என்று ராமமூர்த்தி இடம் சொல்லி வீட்டில் இருக்கிறதா? என்று தேடிப் பார்க்க சொல்ல, ராமமூர்த்தியும் அமிர்தாவும் அவசரமாக வீட்டிற்கு கிளம்பி போகின்றனர். இதை பார்த்த கோபி இவர்கள் அவசரமாக கிளம்புவதை பார்த்தால் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று புரிந்து கொண்டு இனியாவிற்க்கு போன் பண்ணி கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 16th episode full update

அப்போது இனியா விஷயத்தை சொல்ல அதை கேட்டு கோபி கடுப்பாகி ஈஸ்வரியிடம் ஃபோனை கொடுக்க சொல்கிறார். பிறகு ஈஸ்வரி பேசும்போது லைசன்ஸ் வீட்ல இருக்கு அதை எடுக்க உங்க அப்பா போறாரு அவர் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, அதற்கு கோபி நான் ஒரு வண்டி அனுப்பி வைக்கிறேன். அதில் நீங்களும் இனியாவும் வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து கோபி தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு பாக்யா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா போன் செய்ய, நான் அப்ப அங்க தான் வந்தேன். ஆனா இப்போ எனக்கு ஒரு சின்ன வேலை அதான் கிளம்பி போகிறேன் என்று சொல்லி சமாளித்துவிட்டு பிறகு பாக்கியா தன்னிடம் செலவுக்கு காசு இருக்கா என்று கேட்டு அவமானப்படுத்தியதை நினைத்து பார்க்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 16th episode full update

அப்படியே பாக்கியா வீட்டிற்கு வந்ததும் வீட்டில் யாரும் இல்லாததால் அவர் வைத்திருந்த சாவியை வைத்து ரூமை திறந்து பாக்கியாவின் லைசன்ஸை திருடிக் கொண்டு போகிறார். கோபி போன பிறகு அமிர்தா வீட்டிற்கு வந்து லைசென்ஸை தேடி பார்த்து அது எங்கேயும் கிடைக்கவில்லை என்று பாக்யாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.

அதைத்தொடர்ந்து கோபி அனுப்பி வைத்த கார் இனியாவையும், ஈஸ்வரியையும் கூட்டிட்டு அந்த காரில் வீட்டுக்கு போங்க என்று சொல்கிறார். அதே நேரத்தில் கோபி தன்னுடைய நண்பனை சந்தித்து பாக்கியாவுக்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி இப்போது பாக்கியாவை ஜெயிலில் அடைக்க போறாங்க என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு பழனிச்சாமியும் வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+