கேட்டரிங்க்காக வெளியான ஓட்டிங் ரிசல்ட்.. புகழ்ந்து தள்ளும் கோபி.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யா கேன்டினில் கேட்டரிங் தொடரலாமா வேண்டாமா என்று நடந்த ஓட்டிங்கில் ரிசல்ட் வந்திருக்கிறது.

இதுவரைக்கும் வெற்றி பெற்று வந்த பாக்கியா முதல் முறையாக ராதிகாவிடம் தோற்றுப் போய் இருக்கும் நிலையில் கோபி எதிர்பாராத செயலை செய்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கணேசன் தன்னுடைய வீட்டில் தூங்காமல் இரவு முழுக்க அமிர்தா பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா? என்று தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது அமிர்தாவின் காலேஜ் ஐடி கார்டு, புத்தகம் எல்லாவற்றையும் பார்த்து விடுகிறார். அப்போது அங்கே சத்தம் கேட்பது பார்த்து கணேசன் பெற்றோர் வந்து என்ன தேடுகிறா? என்று கேட்ட கணேஷ் அமிர்தாவின் ஐடி கார்டு, புக் எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுகிறார்.

அதற்கு அவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டு பிறகு அமிர்தாவை அவங்க அம்மா வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க என்று மீண்டும் பொய் சொல்லி சமாளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து கோபி ராதிகா வீட்டில் சோகமாக இருக்க அப்போது ராதிகா என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். அதற்கு கோபி ஆபிஸ் டென்ஷன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா ஆபீஸ் பொறுப்பு முழுவதையும் கோடீஸ்வரன் சார் என்கிட்ட தந்துட்டு போயிருக்காரு.
இந்த சந்தர்ப்பத்தை வைத்து பாக்கியாவின் கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விட்டேன் என்று சொல்ல, அதைக் கேட்டு கோபி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அத்தோடு அந்த இடியட்டை இப்படித்தான் பழி வாங்க வேண்டும் என்று சந்தோஷத்தில் ராதிகாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் கேண்டினுக்கான எலக்ஷன் நடைபெறுகிறது. அதில் ராதிகா சொன்னது போலவே யாருமே பாக்கியாவிற்கு ஓட்டு போடவில்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் உங்க பெட்டியை கட்டிக் கொண்டு போங்க என்று ராதிகா சொல்ல, பாக்கியா அதிர்ச்சியாகி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் பாக்கியா எலெக்ஷனில் எப்படியும் ஜெயித்திருவா என்று எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அங்கு வரும் பாக்யாவை கண்டதும் எல்லோரும் என்ன ஆச்சி என்று விசாரிக்க, அதற்கு பாக்கியா கதறி அழுது கொண்டு அங்கு நடந்த விஷயத்தை சொல்ல, அதைக் கேட்டு குடும்பமே அதிர்ச்சி அடைகின்றனர். அத்தோடு ராதிகாவை எல்லோரும் திட்டிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications