பாக்கியலட்சுமி: ராமமூர்த்தி இறந்து போயிட்டாரு.. சொன்னது பலிச்சிடுச்சு.. எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ராமமூர்த்தி பிறந்தநாள் இப்போதுதான் கொண்டாடப்பட்டது ஆனால் அவர் இறந்து போவது போன்று காட்சிகள் ப்ரோமோவில் இருக்கிறது.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் சில நாட்களாகவே ராமமூர்த்தி நான் செத்தால் கூட கோபி இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று அடிக்கடி வசனம் பேசிக்கொண்டிருந்தார். அதனால் இவருக்கு ஏதாவது ஆவது போன்று சீரியலில் கதை கொண்டு போகப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை உறுதி செய்து இன்று புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

baakiyalakshmi serial vijay tv

ஏற்கனவே தன்னுடைய பிறந்த நாளில் கோபி வந்ததற்கு கோபப்பட்ட ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் கோபி நான் செத்தாலும் கொள்ளி வைக்க கூடாது, அவன் எனக்கு மகனே கிடையாது. பாக்கியா தான் என்னுடைய பொண்ணு என்று செண்டிமெண்டாக பேசியிருந்தார். ஆனால் இன்று வெளியான ப்ரோமோ யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டியிருக்கிறார்கள்.

baakiyalakshmi serial vijay tv

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய பில்லர் போல ராமமூர்த்தி தான் இதுவரைக்கும் இருந்து வந்தார். கோபிக்கு எதிராக அடிக்கடி சாபம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் பாக்கியாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே சப்போர்ட்டாக இருந்து வந்தார். பாக்யாவிற்கு அவருடைய மகன் எழில் மற்றும் ராமமூர்த்தி இருவரும் தான் சப்போர்ட்டாக இருந்தனர். ஆனால் சமீபத்தில் எழில் வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

ஆனாலும் ராமமூர்த்தி பிறந்த நாளை பாக்கியா பிரமாண்டமாக கொண்டாடி இருந்தார். எழில் இந்த பிறந்தநாள் பங்க்ஷனுக்கு வந்திருந்தார். பிறந்தநாள் பங்க்ஷனில் ராமமூர்த்தி கையால் மொத்த குடும்பத்தினரும் சாப்பாடு சாப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் பிறந்தநாள் பங்க்ஷன் முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்து இருக்கின்றனர். அப்போது ராமமூர்த்தி இனியா மற்றும் ஈஸ்வரியோடு விதவிதமான புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதோடு ராமமூர்த்தி ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறார். அப்போது பாக்யாவிடம் பாக்கியா நீ ரொம்பவும் நல்ல பொண்ணுமா. மத்தவங்களுக்காக ஓடி ஓடி உன் வாழ்க்கையை நீ வாழாமல் விட்டு விடாதே என்று சொல்ல பாக்கியா என்ன ஆச்சு மாமா? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? என்று கேட்க, அதற்கு ராமமூர்த்தி மனசு நிறைவா இருக்கு. அதனால என்னென்னமோ நான் பேசிட்டு இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பெட்டில் வந்து படுக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

பிறகு ஈஸ்வரி வந்து எழுப்பி பார்க்க ராமமூர்த்தி எழும்பாமல் இருக்க மொத்த குடும்பத்தினரும் வந்து ராமமூர்த்தியை எழுப்பி பார்க்கின்றனர். ராமமூர்த்தியின் இறுதி தருணங்கள் என்று ப்ரோமோவில் கூறப்பட்டிருக்கும் நிலையில் இது சீரியல் ரசிகர்களை ரொம்பவும் பீல் பண்ண வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+