ராதிகாவிடம் கெத்து காட்டிவிட்டு மண்ட மேல இருப்பதை கவனிக்க மறந்துட்டீங்களே.. இத்தனை சொதப்பல்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 22 முதல் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராதிகா பாக்யாவிடம் கேண்டினில் ஆர்டர் வேண்டும் என்றால் இங்கே அனைவரும் சுடிதாரில் வரவேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ப்ரோமோவில் பாக்கியாவும் சுடிதார் ரோடு யூனிபார்மில் வந்து இருக்கிறார். கெத்தான வசனங்களும் பேசி இருக்கிறார். அது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

கோபிக்கு நிம்மதி போச்சு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறது. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு கோபிக்கு ராதிகாவால் பிரச்சனை மேல் பிரச்சனை தான் வந்து கொண்டிருக்கிறது. ராதிகா அதிகமாக செலவு செய்து கோபியை கடன் வாங்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனியாவும் கோபியின் வீட்டில் இருப்பதால் அங்கே அடிக்கடி சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கிறது.

பாக்கியாவிற்கு வெற்றிதான்
பாக்கியாவை கோபி விவாகரத்து செய்த பிறகு தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக அடுத்தடுத்த புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சில நேரங்களில் சறுக்களை சந்தித்தாலும் கடைசியில் அவர்தான் அதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து கேண்டின் தொடங்கி தற்போது அதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். ராதிகாவின் ஆபீசிலும் கேண்டீன் ஆர்டர் எடுத்து கெத்து காட்டி கொண்டிருக்கிறார்.

புது ரூல்ஸ்சா இது
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ராதிகா பாக்யாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று தன்னுடைய ஆபீஸில் அவர் ஹெச்ஆர் ஆக இருப்பதால் பாக்யா தொடர்ந்து இங்கே கேண்டில் நடத்த வேண்டும் என்றால் அனைவரும் சல்வார் போட்டு யூனிஃபார்மில் வரவேண்டும் என்று ஆர்டர் போடுகிறார். ஆனால் ஒரு ஆபீஸில் கேண்டினில் வேலை பார்ப்பவர்கள் சர்வாரில் வரவேண்டுமாம் ஆனால் ஹெச்ஆர் மட்டும் அதே புடவையில் வந்தால் போதுமா? இது எந்த வகையில் நியாயம்? எந்த ஆபீஸிலும் இப்படி ஒரு ரூல்ஸ் நாங்கள் கேள்விப்பட்டதே கிடையாது என்று தற்போது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த கேப் எதற்கு
அது மட்டும் இல்லாமல் ராதிகா இப்போது சுடிதாரில் கெத்தாக வந்துவிட்டார். ஆனால் அவரோடு வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் தலையில் கேப் வைத்திருக்கிறார்கள். அது அங்கு பணி செய்யும் பெண்களின் தலையை முழுமையாக கவர் செய்யாமல் இருக்கிறது. இதை வைத்து இப்போது நெட்டிசன்கள் எதற்காக போட வேண்டுமோ அதையே சரியாக போடாமல், எதற்காக இப்படி ஸ்டைலாக போட்டுக்கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications