பாக்கியலட்சுமி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: சங்கமத்துக்குள் சங்கமமா? என்ன இப்படி சொதப்பல்.. ராதிகா கேட்ட செம கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் ஜனவரி 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா மற்றும் கோமதியின் குடும்பத்தினர் ஒரு பக்கமாக சங்கமம் செய்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோமதி குடும்பமும் பாக்கியா குடும்பமும் மீண்டும் ஹோட்டலில் மூட்டிக்கொண்டு கொள்கின்றனர். அப்போது எழிலை பாக்யா சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு போக இந்த பக்கம் கோமதி தன்னுடைய மகனை சமாதானம் செய்து கூட்டிக்கொண்டு போகிறார். அதே நேரத்தில் மறுபக்கம் ராதிகாவும் கோமதி திருமணத்திற்கு குன்னக்குடி செல்வதற்காக ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.

அப்போது ஈஸ்வரி பத்தரமா போயிட்டு வாங்க என்று வழி அனுப்பி வைக்க, அதற்கு ராதிகா இனியா கூட வரியா என்று கேட்டு அவரும் ஜாலியா இருக்கும் என்று கிளம்பி போகிறார். பிறகு ராஜீ யோசித்துக் கொண்டே அமர்ந்திருக்க அங்கே கண்ணன் வருகிறார். என்னை ஏமாத்த நினைச்சா நான் தற்கொலை செஞ்சுகிட்டு உன் பேர எழுதி வெச்சிடுவேன் என்று ராஜீயை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் தன்னுடைய சித்தி வந்துவிட அங்கிருந்து ராஜீ சென்று விடுகிறார். அப்போ ஹோட்டலில் நிலா பாப்பா வை எழில் கொஞ்சி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அமிர்தா வர அவரிடம் பாக்கியா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு கோமதியும் மீனாவும் கோயிலுக்கு செல்வதாக கிளம்பி விடுகின்றனர். மறுபக்கத்தில் ராதிகா, கோபி, இனியா மூவரும் குன்னக்குடிக்கு வருகின்றனர்.

அங்கு கோபியை ராதிகாவின் அண்ணன்கள் இருவரும் கட்டி பிடித்து வரவேற்கின்றனர். அப்போது கோபி திணரி போக அங்கு ராஜு வருகிறார். அவரிடம் ராதிகா உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தானே முகமே சரியில்லையே என்று கேட்கிறார். அதற்கு ராஜீவின் சித்தப்பா ராஜீக்கு எப்படி இந்த வீடு பிடிக்காமல் இருக்கும். அவங்க நம்மள விட பெரிய இடம் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் ராதிகாவும் கோமதியின் அண்ணன் மகள் திருமணத்திற்கு சென்று அங்கு ஒரு சங்கமத்தை போட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த நேரத்தில் தன்னுடைய சித்தி வந்துவிட அங்கிருந்து ராஜீ சென்று விடுகிறார். அப்போ ஹோட்டலில் நிலா பாப்பாவை எழில் கொஞ்சி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அமிர்தா வர அவரிடம் பாக்கியா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு கோமதியும் மீனாவும் கோயிலுக்கு செல்வதாக கிளம்பி விடுகின்றனர். மறுபக்கத்தில் ராதிகா, கோபி, இனியா மூவரும் குன்னக்குடிக்கு வருகின்றனர்.

அடுத்த கட்டத்தில் செழியன் வேலைக்கு கிளம்பி கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு ஜோசப் வந்து எங்க வீட்டு குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்க இருக்கிறோம் என்று சொல்ல, ஈஸ்வரி நாங்களும் கேள்விப்பட்டோம் என்று சொல்ல, அப்படியா உங்களுக்கு தெரிஞ்சிருந்தா நாங்க இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டோம் என்று பதிலடி கொடுத்துவிட்டு கையில் கொண்டு வந்த இன்விடேஷனை கீழே வைத்து விட்டு நீங்கள் கண்டிப்பாக அங்கே வந்து விடாதீங்க என்று சொல்லிவிட்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications