பாக்கியலட்சுமி: இனியாவால் வெடித்த பிரச்சனை! பாக்கியா எடுத்த முடிவு.. பதறிய ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 7ஆம் தேதிக்கான எபிசோடில் மயூ கோபியிடம் பேசுவதை பார்த்து கோபமான இனியா செய்த செயலால் பாக்கியா திட்டுகிறார். அதைத் தொடர்ந்து ராதிகாவால் ஈஸ்வரிக்கு அவமானம் நடக்கிறது.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி கோபியை வாக்கிங் போவதற்காக கூப்பிடுகிறார். அப்போது கோபி ரெடியானதும் அங்கு வந்த ராதிகா நான் கோபியோடு போகிறேன் என்று சொல்ல, இல்லை நான் போகிறேன் என்று ஈஸ்வரி சொல்கிறார். இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை உருவாகுவது போல இருக்க கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது ராதிகா நீங்க வேகமா நடக்க மாட்டீங்க இந்த சமயத்தில் கோபி வேகமா நடக்கணும் அதனால் அவர் என் கூடவே வரட்டும் என்று சொல்லி கூப்பிட்டு போகிறார். அடுத்தது கோபியும் ராதிகாவும் வாக்கிங் போகும்போது அங்கு வந்தவர்கள் நீங்க வீட்டை காலி பண்ணிட்டு இப்போ பாக்கியா வீட்டிலா இருக்கீங்க? என்று கேட்கிறார்கள்.

அதற்கு ராதிகாவும் ஆமாம் என்று சொல்கிறார். அதோடு கோபியையும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். பிறகு நாங்கள் கொஞ்ச நாளைக்கு தான் பாக்கியா வீட்டில் இருப்போம் அதற்கு பிறகு கிளம்பி போய்விடுவோம் என்றுதான் சொல்லிவிட்டு மீண்டும் கோபியுடன் நடக்கிறார். அப்போது கோபியால் வேகமாக நடக்க முடியவில்லை.

television baakiyalakshmi serial vijay tv

அதனால் நான் மெதுவா வரேன் நீ போய் மயூவை ஸ்கூலுக்கு கிளப்பி விடு என்று சொல்கிறார். இதனால் ராதிகாவும் முன்னாடி செல்கிறார். அப்போது அங்கு பாக்யாவும் வருகிறார். பாக்யாவை பார்த்ததும் நீங்க எல்லா பக்கமும் இருக்கிறீங்க. இப்பதான் கிச்சனில் வேலை செஞ்சுட்டு இருந்தீங்க, அதற்குள் இங்கேயும் வந்துட்டீங்க. வீட்டையும் பாக்குறீங்க ரெஸ்டாரண்டையும் கவனிக்கிறீங்க. உங்களால் மட்டும் எப்படி முடியுது என்று கேட்கிறார்.

பிறகு இருவரும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். அந்த நேரத்தில் ஈஸ்வரி நானும் பார்க்குக்கு போறேன் என்று அங்கு நடக்க வருகிறார். அப்போது ராதிகாவும் பாக்கியாவும் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு கோபி தனியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து கோபி இடம் வந்து என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது கோபி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் போல இருந்தது அதனால் உட்கார்ந்திருக்கிறேன். நான் தான் ராதிகாவை போக சொன்னேன் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி ராதிகா பாக்கியாவையும் மாத்திடுவாளோனு பயமா இருக்கு என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி வீட்டிற்கு வந்ததும் மயூ கணக்கில் டவுட் கேட்கிறார்.

அப்போது கோபி பக்கத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பாக்யாவும் ராதிகாவும் சமையல் செய்த படியே கவனிக்கிறார்கள். அந்த நேரத்தில் இனியா வருகிறார் இனியா கோபி மயூவுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து வேண்டுமென்றே தன்னுடைய பிரண்டு பிறந்தநாள் பங்க்ஷன் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

இனியாவின் நடவடிக்கையை பார்த்து கோபமான பாக்கியா இனியாவை திட்டுகிறார். அப்போது ஈஸ்வரி வந்து நீ எப்பவும் இனியாவுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும் இனியா தான் உன் பொண்ணு மயூக்கு சொல்லிக் கொடுக்க அவங்க அம்மா இருக்கா என்று சண்டை போடுகிறார்.

இதனால் ராதிகா மயூவை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார். பிறகு கோபி மயூவை சமாதானம் செய்கிறார். பாட்டிக்கு வயசாயிடுச்சு அதனால்தான் அவங்க இப்படி எல்லாம் நடந்துக்கிறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+