Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராதிகா வீட்டில் ஈஸ்வரி செய்த தில்லாலங்கடி வேலை.. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே! கோபிக்கு வந்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே இருபதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் கோபியோடு ராதிகா வீட்டிற்கு வந்த ஈஸ்வரிக்கு ராதிகாவின் அம்மாவால் சாப்பாடு பிரச்சனை ஏற்படுகிறது.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா கோபியை சாப்பிட கூப்பிட கோபி டைனிங் டேபிளில் வந்து உட்காருகிறார். பிறகு அம்மாவை கூப்பிட்டு வருகிறேன் என்று எழுந்து போய் ஈஸ்வரியை சாப்பிட கூட்டிட்டு வந்து உட்கார வைக்கிறார். ஈஸ்வரி வந்ததும் என்ன சாப்பாடு என்று கேட்க அவள் உப்புமா என்று கோபி என் கையாலே பரிமாறுகிறேன் என்று பரிமாற போக அதற்கு ஈஸ்வரி அவள் உப்புமாவா இதெல்லாமா சாப்பிடுவாங்க என்று கேட்க அதற்கு கமலா எங்க வீட்டுல சாப்பிடுவோம் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial May 20th promo and episode full update

அதற்கு ஈஸ்வரி நாங்க இதெல்லாம் சாப்பிட மாட்டோம் என்று சொல்ல கோபி இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. நாளையில் இருந்து உங்களுக்கு சப்பாத்தி போட சொல்றேன் என்று சொல்ல கமலா எல்லாருக்கும் யாரு சப்பாத்தி தேய்க்கிறது என்று கேள்வி கேட்கிறார். அதைத் தொடர்ந்து தொட்டுக்க என்ன இருக்கு என்று ஈஸ்வரி கேட்டதும் அவள் உப்புமாவுக்கு யாராவது தொட்டுக்க செய்வாங்களா என்று கமலா கேள்வி கேட்க, அதற்கு ஈஸ்வரி நாங்க செய்வோம் என்று பதில் கொடுக்கிறார்.

பிறகு அவள் வேகவே இல்ல என்று ஈஸ்வரி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ராமமூர்த்தி வருத்தப்படுவார் என்று எழில் அமிர்தா எல்லோரும் ராமமூர்த்தி இடம் பேசி அவருக்கு ஆறுதல் சொல்ல அதற்கு ராமமூர்த்தி ஈஸ்வரி புள்ள பாசத்துல இருக்கா. அவன் அந்த பாசத்தை வச்சு அவளை ஏமாத்திக்கிட்டு திரியிறான். அவ அந்த வீட்டில நல்லா பட்டு வரட்டும். அப்பதான் அவளுக்கு புத்தி வரும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக கமலா ராதிகாவிடம் இருக்கிறது ரெண்டு ரூமு அதுல அந்த அம்மா எங்க தூங்கும்? என்று கேட்க அதற்கு ராதிகா ஈஸ்வரியோடு பேசிக் கொண்டிருக்கும் கோபியை தனியாக பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார். அதற்கு ஈஸ்வரி எதுவாக இருந்தாலும் என் முன்னாடியே பேசு என்று சொல்ல அதற்கு ராதிகா இருக்கிறது ரெண்டு ரூம் தான் அதுல ஒரு ரூமில் நாங்க தூங்குறோம் இன்னொரு ரூமில் அம்மாவும் மயூவும் தூங்குறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி குறுக்கிட்டு ஒரு ரூம்ல நீங்க தூங்குங்க இன்னொரு ரூம்ல நான் தூங்குவேன் என்று சொல்ல,

அதற்கு ராதிகா அப்போ எங்க அம்மா எங்க தூங்குவாங்க என்று கேட்க ஹால்ல தூங்க சொல்லு என்று தன்னுடைய சூட்கேஸை தூக்கிக்கொண்டு ரூமிற்கு சென்று விடுவதோடு மட்டுமல்லாமல் கமலாவின் துணிகளை எடுத்து வந்து ஹாலில் வைத்து உங்களுக்கு ஏத்த இடத்துல வச்சுக்கோங்க என்று சொல்கிறார். இதனால் கோபி ராதிகாவிடம் சிக்கிக் கொள்கிறார். அதோடு இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு உங்க அம்மாவை உங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க என்று ராதிகா கண்டிஷன் போட கோபி என்ன செய்ய என்று முழித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+