ராதிகா கர்ப்பம் குடும்பத்துக்கு தெரிஞ்சாச்சு..காத்திருந்த அதிர்ச்சி! இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலையே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே ஏழாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயம் கோபி மூலமாக ஈஸ்வரிக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் ஈஸ்வரி குழந்தையை கலைக்க சொல்ல அதற்கு ராதிகா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியை கோபி தனியாக காரில் வெளியே போகலாம் என்று கூட்டிட்டு போகும் போது கோபியின் நடவடிக்கையை பார்த்து ஈஸ்வரி உனக்கு ஏதாவது பிரச்சனையா? ஒரு வாரமா நீயும் சரி இல்ல ராதிகாவும் சரி இல்ல என்று கேட்க அதற்கு கோபி நீங்க பாட்டியாக போறீங்கன்னு தெரிஞ்சா எப்படி பீல் பண்ணுவீங்க என்று கேட்க, ஈஸ்வரி அதான் நான் ஏற்கனவே பாட்டி ஆகிட்டேனே என்று சொல்கிறார்.

அதற்கு கோபி நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வரப்போகுது என்று சொன்னதும் ஈஸ்வரி அமிர்தா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று குழப்பத்தில் கேள்வி கேட்க, அதற்கு கோபி இல்ல நான் எழில் அமிர்தா பற்றி பேசல என்று சொன்னதும் ஈஸ்வரி செழியனுக்கு குழந்தை பிறக்க போகுதா? அவங்க இப்பதான சண்டை போட்டு சேர்ந்து இருக்காங்க என்று குழப்பத்தில் இருக்கும் போது கோபி கோபத்தில் நான்தான் அப்பாவாக போகிறேன்.
ராதிகா அம்மாவாக போகிறார் என்று உண்மையை சொல்லி விடுகிறார். அதைக் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அதோடு இது எத்தனாவது மாசம் என்று ஈஸ்வரி விசாரிக்க அதற்கு கோபி எனக்கு அந்த கணக்கெல்லாம் தெரியாது. அடுத்த வாரம் ஸ்கேன் பார்க்கணும் என்று சொன்னாங்க என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி எல்லாரும் பையன் அம்மா கிட்ட அப்பாவாக போறேன்னு சொன்னா சந்தோஷப்படுவாங்க.
ஆனால் என்னால் அப்படி சந்தோஷப்பட முடியலை என்று கவலைப்படுகிறார். அதற்கு கோபி தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்ல, ஈஸ்வரி உங்களுக்கு இந்த குழந்தை அவசியமா? ராதிகாவும் வேண்டாம் என்ற முடிவில் தானே இருக்கிறா என்று கேட்க, அதற்கு கோபி இல்லம்மா அவ பெத்துக்கலாம் என்று சொல்லுறா.. அவங்க அம்மாவும் எங்கள் இருவருக்கும் ஒரு ஆதாரம் வேண்டும் என்று சொல்லுறாங்க என்று சொன்னதும் ஈஸ்வரி இது வெளியே தெரிஞ்சா ஊர் உலகம் என்ன பேசும்?
வீடு இருக்கிற சூழ்நிலையில் அதெல்லாம் சரிப்பட்டு வராது. நாளைக்கு உன் பசங்க உன்னை மதிக்கக்கூட மாட்டாங்க. இதுவரைக்கும் நல்ல அப்பாவாக இருந்ததற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்று சொல்கிறார். அதோடு நான் ராதிகா கிட்ட இந்த விஷயத்தை பற்றி பேசுகிறேன். என்னதான் இருந்தாலும் பாக்கியா இவ்வளவு நடந்த பிறகும் எங்களை விட்டுப் போகாமல் எங்க கூடவே இருக்கிறார். அவ தான் எங்களுக்கு முதலில் முக்கிய அப்புறம் தான் நீ என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு கோபியும் ஈஸ்வரியும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது ஈஸ்வரியின் முகம் சோகமாக இருப்பதை பாக்கியா பார்த்து என்னவென்று விசாரிக்க அதற்கு ஈஸ்வரிக்கு வெயிலில் வெளியே போயிட்டு வந்ததால இப்படி இருக்கிறேன் என்று சமாளித்து ராதிகா எங்கே இருக்கிறார் என்று கேட்டு மாடிக்கு போகிறார்.
அப்போது ராதிகாவிடம் இது எத்தனாவது மாசம் என்று கேட்க, இது இரண்டாவது மாசம் என்று ராதிகா சொன்னதும் அப்போ சரி பிரச்சனை இல்ல.. இந்த குழந்தை வேண்டாம். அபார்ஷன் பண்ணிட்டு என்று சொன்னதும் கோபமான ராதிகா இந்த குழந்தை விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நானும் கோபியும் தான். என்னால் அபார்ஷன் பண்ண முடியாது என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சியாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications