பாக்கியலட்சுமி: என் வாழ்க்கைக்கு நான் முக்கிய முடிவு எடுத்து இருக்கிறேன்! இனியா சொன்ன வார்த்தை.. ஆடி போன குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தன்னுடைய வாழ்க்கைக்காக தான் முக்கிய முடிவு எடுத்திருப்பதாக இனியா சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இனியா சொன்ன முடிவுக்கு ஈஸ்வரி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதை தான் வந்திருக்கிறது. இனியாவின் கணவரான நிதிஷுக்கு போதைப்பொருள் பழக்கம் இருக்கும் விஷயம் இனியாவிற்கு தெரிய வந்ததும் அவர் அதிர்ச்சியில் இருந்தார். ஆனாலும் அது பற்றி கேட்டபோது இனியா அவருடைய முன்னாள் காதலன் ஆகாஷ் உடன் பேசியதால் தான் நிதிஷ் இப்படி மாறிவிட்டார் என்று மொத்த கதையையும் சுதாகர் குடும்பத்தினர் மாற்றி வைத்திருந்தனர்.

Baakiyalakshmi Serial vijay TV

இதனால் இனியாவிற்கு ஒரு வருத்தமும் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் நடந்த விஷயத்தை பற்றி கோபியிடம் இனியா சொல்லி இருந்தார். அதைக் கேட்டு கோபி கோபத்தில் இருக்கிறார். தன்னுடைய மகள் வாழ்க்கை இப்படி ஆனதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனே என்று கோபி வருத்தத்தில் இருக்கும்போது பாக்யா கண் முன் நிதிஷை போலீஸ் அரெஸ்ட் செய்திருக்கின்றனர். அது பற்றி சுதாகரிடம் சொன்னபோது தன்னுடைய மகனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது, ஆனால் அவனுடைய நண்பர்கள் செய்த தப்பால்தான் நிதிஷை போலீஸ் அரெஸ்ட் செய்துட்டாங்க இன்று மாலைக்குள் கூட்டிட்டு வந்துருவேன் என்று சுதாகர் சொல்லி இருந்தார்.

ஆனால் வீட்டிற்கு வந்த பாக்யாவிடம் இனியா மேலும் பல ரகசியங்களை சொல்லி இருந்தார். அதாவது பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்காக தான் இந்த திருமணம் நடந்தது என்ற உண்மைகளை இப்போது இனியா மொத்த குடும்பத்திற்கும் சொல்லி இருக்கிறார். இதனால் சுதாகர் பற்றி குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் சுதாகர் இனியாவை சமரசம் செய்து மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்

இப்படியான நிலையில்தான் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியா இனி காலம் முழுக்க இந்த வீட்டிலேயே இருக்கலாம் என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா என்னுடைய வாழ்க்கைக்காக ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொன்னதும் எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்கின்றனர். அதற்கு நான் நிதிஷை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சொல்கிறார். அதை கேட்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி ஆகியும் சொன்னார்.

பாக்கியலட்சுமி: சுதாகர் போட்ட திட்டம்.. கோபி எடுத்த முடிவு.. இனியா பாக்கியாவிடம் சொன்ன விஷயம்
ஆனால் இனியா எடுத்த முடிவு நல்லதாக இருந்தாலும் இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் பூமர் ஈஸ்வரி இதற்கு என்ன பஞ்சாயத்து செய்ய போகிறார் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+