பாக்கியலட்சுமி: கோபியிடம் கதறி அழுத செழியன்.. ஜெனி எடுத்த முக்கிய முடிவு.. பாக்யா சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 18ஆம் தேதிக்கான எபிசோடில் செழியனுக்கு வேலை போய்விட்டது என்பதால் கோபியிடம் சென்று அழுது புலம்புகிறார். ஆனால் வீட்டில் அந்த உண்மையை மறைத்து விடுகிறார். அதுபோல பாக்கியா பண விஷயத்தில் முக்கிய முடிவெடுத்திருக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செழியன் ஆபீஸில் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் தங்களுடைய ஆபீஸ் நிலைமை சரியில்லாமல் இருக்கிறது அதனால் வேறு வழியில்லாமல் தான் இந்த முடிவு எடுத்தோம் நீங்கள் நோட்டீஸ் பீரியட் கூட வேலை பார்க்க வேண்டாம். இன்றைக்கு வேலையில் இருந்து ரிலீவ் ஆகிவிடலாம் என்று சொல்லுகின்றனர்.

baakiyalakshmi serial vijay tv

இதனால் வேறு வழி இன்றி தன்னுடைய ஐடி கார்டு கொடுத்துவிட்டு உடைந்து போய் வெளியே வருகிறார். மறுபக்கத்தில் எழில் பாக்கியா படும் கஷ்டத்தை நினைத்து அமிர்தாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அம்மா 11 லட்சம் கொடுக்க வேண்டும் என்னால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை இந்த நேரத்தில் உறுதுணையாக இருக்கணும் என்று நினைக்கிறேன் ஆனால் இப்படி எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறேனே என்று அழுது கொண்டிருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதோடு நான் என்னுடைய சுய கௌரவத்தையும் ஆசைகளையும் மண் தோண்டி புதைத்து விட்டு கிடைக்கிற வேலைக்கு போக போறேன் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு அமிர்தா எல்லாம் சரியாகும் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இதைத்தொடர்ந்து செழியன் கோபியின் ரெஸ்டாரண்டுக்கு சோகமாக வர கோபி என்னாச்சு என்று கேட்டதும் கையில் இருக்கும் பேக்கை கீழே போட்டு விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார்.

கோபி தன்னிடம் வேலை பார்ப்பவர்களை உள்ளே போக சொல்லிவிட்டு நடந்தது என்னவென்று விசாரிக்க செழியன் வேலை போய்விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என்று அட்வைஸ் பண்ணுகிறார். மறுபக்கத்தில் பாக்கியா ஈஸ்வரி வீட்டில் சாப்பிடவில்லை என்று செல்வியிடம் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது ஜெனி தன்னுடைய நகைகளை எடுத்து கொடுத்து அடகு வைத்து விட்டு கடன் பிரச்சனையை கொடுக்குமாறு சொல்கிறார். ஆனால் அப்படியெல்லாம் வேண்டாம் நான் நிச்சயம் இந்த பிரச்சனையை எப்படியாவது முடிப்பேன் என்று பாக்கியா சொல்கிறார். அடுத்த கட்டத்தில் செழியன் வீட்டிற்கு வருகிறார் எதுவுமே சொல்லாமல் வீட்டிற்குள் போய்விடுகிறார்.

baakiyalakshmi serial vijay tv

தனக்கு வேலை போன விஷயத்தை அவர் வீட்டில் யாரும் சொல்லாமல் இருக்கிறார். அதே நேரத்தில் எழில் பழைய ப்ரொடியூசரை சந்தித்து தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கெஞ்சுகிறார். ஆனாலும் அவர் நான் உனக்கு தந்த வாய்ப்பை நீ சரியா பயன்படுத்தல. அதனால உனக்கு இன்னொரு வாய்ப்பு தர முடியாது என்று மறுத்து விடுகிறார். வேறு வழி தெரியாமல் எழில் அங்கேயே சோகமாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+