விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் பல சின்னத்திரை ரசிகர்களின் மனதில் புதிதாகவே இருக்கிறது. 5 வருடங்களுக்கு மேலாக ஓடி, இல்லத்தரசிகளின் வாழ்க்கையை பிரதிபலித்த இந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகும், அதன் கதாபாத்திரங்கள் குறித்து பேசுவது இன்னும் குறையவில்லை.
இந்த சீரியலில் பாக்கியாவாக நடித்த சுசித்ரா மற்றும் கோபியாக நடித்த சதீஷ் ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷமாக மாறியுள்ளது.

பாக்கியா ஒரு கதாபாத்திரம் மட்டும் இல்லை
பாக்கியலட்சுமி சீரியல் சாதாரண குடும்ப கதையாக இல்லாமல், பல பெண்களின் வாழ்க்கையை பிரதிபலித்தது. குடும்பத்தில் மதிப்பு இல்லாமல் இருந்தாலும், தன்னம்பிக்கையால் முன்னேறும் ஒரு பெண்ணின் பயணமாக பாக்கியா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.
கணவன், மாமியார், குழந்தைகள் என அனைவராலும் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், தனது உழைப்பாலும் மன உறுதியாலும் தன்னை நிரூபித்துக் கொண்ட பெண் என்ற கோணத்தில் அந்த கதாபாத்திரம் அமைந்தது. இதனால் தான் அந்த சீரியல் பல இல்லத்தரசிகளுக்கு ஒரு "ரோல் மாடல்" ஆக மாறியது.
மீண்டும் சேரும் அதே ஜோடி
இப்போது அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருவது போல, சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் புதிய சீரியலில் ஜோடியாக இணைகிறார்கள். இந்த புதிய சீரியலுக்கு "ஆதலால் காதல் செய்வீர்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீரியலின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியிருப்பதாகவும், விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.
ஹீரோவாக அருண் பிரசாத் கம்பேக்
இந்த சீரியலில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஹீரோவாக நடிக்க இருப்பது அருண் பிரசாத். இவர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர். அதற்குப் பிறகு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் கவனம் பெற்றார். சில காலமாக சீரியல்களில் இருந்து விலகி இருந்த இவர், இந்த புதிய சீரியல் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார்.
ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
ஒருபுறம் பாக்கியலட்சுமி ஜோடி மீண்டும் சேருவது... மறுபுறம் அருண் பிரசாத் கம் பேக் கொடுப்பது... இவை இரண்டும் சேர்ந்து இந்த புதிய சீரியலுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பாக்கியலட்சுமி முடிந்த பிறகு "அந்த மாதிரி ஒரு சீரியல் மீண்டும் வருமா?" என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

என்ன மாதிரியான கதை?
"ஆதலால் காதல் செய்வீர்" என்ற தலைப்பே பார்த்தால், இது குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட காதல் கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பாக்கியலட்சுமி மாதிரி உணர்ச்சி மற்றும் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் கலந்த கதை இருந்தால், மீண்டும் ஒரு பெரிய ஹிட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.
மொத்தத்தில், சின்னத்திரையில் ஏற்கனவே ஹிட் ஆன முகங்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வருவது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஸ்பெஷல் விஷயம். அதே உணர்வை மீண்டும் உருவாக்குமா இந்த புதிய சீரியல் என்பது விரைவில் தெரியும்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications