நடிகைகள் பற்றி ராதிகா சொன்ன கருத்து..கோபத்தில் பாக்கியராஜ்... இப்படி எல்லாம் இல்லை.. மேடையிலே ஆவேசம்
சென்னை: பிரபல இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராதிகா நடிகைகள் குறித்து பேசும்போது நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மரியாதை இல்லை என்று கூறியிருக்கிறார்.
அதைக்கேட்டு கோபமான பாக்கியராஜ் அப்படியெல்லாம் இல்லைங்க என்று பல உதாரணங்களையும் கூறியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கின்றனர். அதில் நடிகர் பாக்யராஜும் ஒருவர் இவர் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் பரீட்சையமானவர் தான். ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் சில காலத்திற்கு பிறகு தனியாக படம் எடுக்க துவங்கினார்.

பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதுபோல பாக்கியராஜ் இயக்கிய பல திரைப்படங்கள் அதிகபட்சமாக குடும்ப திரைப்படங்களாக தான் இருந்திருக்கிறது. குடும்ப சூழலில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கூறும் படங்களாகவே அவை பெரும்பாலும் இருந்திருக்கிறது. அதனாலேயே அதிகமான ரசிகர்களுக்கு பாக்கியராஜ் திரைப்படங்கள் பிடித்திருக்கிறது.
அதிலும் தாவணி கனவுகள், இது நம்ம ஆளு, முந்தானை முடிச்சு போன்ற பல திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கும் இயக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து திரைப்படங்களாக இருக்கிறது. அதனால்தான் அந்த காலகட்டத்தில் நடிகர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக இவருடைய வீட்டில் அத்தனை பேர் காவல் காத்திருப்பார்களாம். இவரை பார்ப்பதற்காகவும் இவரிடம் வாய்ப்புக்காகவும் வேண்டி பலர் இரண்டு மூன்று தெரு வரைக்கும் நின்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் இவர் அதிகமான திரைப்படங்கள் இயக்குவதில்லை. அதுபோல சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் youtube சேனல் ஆரம்பித்து பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். கடைசியாக இவருடைய youtube சேனலில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினியை பேட்டி எடுத்திருந்தார். அவர் பாக்கியராஜ் உடன் "தாவணி கனவுகள்" திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும் பற்றி பேசி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாக்கியராஜ் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டிருந்தார். ராதிகா அங்கு பேசுகையில் சலுகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதாக மரியாதை இல்லை என்பது போல பேசி இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த பாக்கியராஜ் கூறும்போது தமிழ் சினிமாவில் இருந்து வந்து முதலமைச்சரானவர் தான் ஜெயலலிதா. அதுபோல சினிமா ரசிகர்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டி உள்ளனர். நடிகை ரோஜாவும் கூட தற்சமயம் அரசியலில் நல்ல இடத்தில் இருக்கிறார். எனவே தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு மரியாதை இல்லை என்று கூறாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
-
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா? கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications