அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ்
சென்னை: தமிழ் சினிமாவில் "இயக்குநர் இமயம்" என்று அழைக்கப்படும் பாரதிராஜா பற்றிய சமீபத்திய தகவல்கள் ரசிகர்களை கவலையிலும், அதே நேரத்தில் நிம்மதியிலும் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த அவரது தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதிராஜா உடல்நிலை
கடந்த டிசம்பர் மாத இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக பாரதிராஜா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட அவர், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்தார். இந்த நேரத்தில் பலரும் அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். குறிப்பாக சீமான், ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலரும் குடும்பத்தினரை சந்தித்தனர்.
இந்நிலையில் வெளியாகியுள்ள சமீபத்திய புகைப்படத்தில், பாரதிராஜா மிகவும் மெலிந்த நிலையில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. "இவர் தான் பாரதிராஜாவா?" என்று கேட்கும் அளவுக்கு அவரது தோற்றம் மாறியிருந்தது.
ஆனால் அதே நேரத்தில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியிட்ட தகவலில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது - தற்போது அவர் நலமாகி வருகிறார், விரைவில் வீட்டிற்கு திரும்பவும் தயாராக உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. எல்லாருக்குமே வயது ஆக ஆக தோற்றத்தில் மாற்றம் வரும் அதேபோல இப்போது பாரதிராஜாவிற்க்கும் நடந்து இருக்கிறது. முதுமையில் தன்னுடைய மகனின் இறப்பிற்கு பிறகு பல வேதனைகளை தாங்கி வந்த பாரதிராஜா மீண்டு பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசை.

பாரதிராஜா யார்?
1970களில் தமிழ் சினிமாவை முற்றிலும் மாற்றியவர் தான் பாரதிராஜா. நகர கதைகளை விட்டு, கிராம வாழ்க்கையை இயல்பாகவும் உணர்ச்சிவசப்படுத்தும் விதமாகவும் திரையில் கொண்டு வந்தவர்.
'16 வயதினிலே', 'மண்ணில் இருந்து மண்ணுக்கு', 'அலையோசை', 'கருத்தம்மா' போன்ற படங்கள் அவரது சினிமா பயணத்தில் மைல் கற்களாக அமைந்தவை. புதிய முகங்களை அறிமுகப்படுத்துவது, இயல்பான நடிப்பு, உண்மை வாழ்க்கை கதைகள்-இவை எல்லாம் அவரது ஸ்டைல்.
இயக்குனராக மட்டுமல்ல, நடிகராகவும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். வயது ஆகியும் அவர் நடித்துக் கொண்டிருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
பாரதிராஜாவின் குடும்பம்
பாரதிராஜா குடும்ப வாழ்க்கையும் எளிதானதல்ல. அவருக்கு மகன் மனோஜ் பாரதிராஜா இருந்தார். அவர் சில படங்களில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு மனோஜ் மரணம் அடைந்தது பாரதிராஜாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த இழப்பிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை என்று நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.
அவரது மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்கள் மலேசியாவில் மகள் வீட்டில்தான் பாரதிராஜா இருந்தார். பின்னர் சென்னை திரும்பிய பிறகுதான் உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது.
ரசிகர்களின் உணர்வு
பாரதிராஜா என்பது ஒரு பெயர் மட்டும் இல்லை - அது ஒரு காலம். தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பாதையை காட்டிய மனிதர்.அவரை இப்படியாக மெலிந்த நிலையில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு வலி இருந்தாலும், "அவர் மீண்டு வருகிறார்" என்ற செய்தி ஒரு நிம்மதியை கொடுத்துள்ளது.
ஒரு பெரிய இயக்குநர், ஒரு தந்தை, ஒரு கலைஞன் - இந்த மூன்றையும் சேர்த்த மனிதர் தான் பாரதிராஜா. வாழ்க்கையில் பல உயரங்களையும், தாழ்வுகளையும் பார்த்தவர்.
இப்போது உடல்நிலை சவாலையும் கடந்து மீண்டு வருகிறார் என்பதே ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம். "இயக்குநர் இமயம்" இன்னும் பல ஆண்டுகள் நலமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications