Ilaiyaraaja: நண்பன் பாரதிராஜாவின் அசைவற்ற உடல்.. வித்தியாசமாக பேசிய இளையராஜா
சென்னை: தமிழ் சினிமா இன்று ஒரு பொற்கால நட்பின் முடிவை கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது ஆருயிர் நண்பரும் இசைஞானியுமான இளையராஜா நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தருணம் பலரது கண்களையும் கலங்க வைத்துள்ளது.
சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இளையராஜா, சில நிமிடங்கள் அமைதியாக நின்று தனது நண்பனை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்கள் முன்பு பேசிய சில வார்த்தைகளே தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இளையராஜா பேட்டி
செய்தியாளர்கள் இளையராஜாவிடம் கருத்து கேட்டபோது, குரல் தழுதழுக்க அவர் கூறியதாவது, "பேசுவதற்கு ஒன்னும் இல்லை... இதில் என்ன இருக்கு? நண்பன் பாரதிராஜா... இந்த உலகத்தை விட்டு போயிட்டாரு. அவருடைய உயிர் நல்லபடியாக இளைப்பாறணும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். அது தவிர வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை." என்று கூறி இருக்கிறார். இந்த ஒரு வரியே இளையராஜாவின் மனநிலையை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரசிகர்களும் முக்கியம்
அதன்பிறகு அவர் மேலும் பேசும்போது, "எனக்கு மக்கள் எல்லோரும் எந்த அளவிற்கு பிடிக்குமோ... எந்த அளவிற்கு முக்கியமோ... அதே அளவிற்கு என்னுடைய நண்பன் பாரதிராஜாவும் எனக்கு முக்கியம். எனக்கு மரியாதை கொடுக்கிற மக்கள், பாசம் காட்டுற ரசிகர்கள், நண்பர்கள்... எல்லாருமே ஒன்னுதான்." என்று கூறினார். இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தேனி மண்ணில் தொடங்கிய நட்பு
இளையராஜாவும் பாரதிராஜாவும் வெறும் சினிமா நண்பர்கள் அல்ல. தேனி மாவட்டத்தின் மண் வாசனையை சுவாசித்து வளர்ந்த இருவரும், சினிமா கனவுகளுடன் சென்னை வந்தவர்கள். சினிமாவில் வாய்ப்புக்காக போராடிய காலங்களில் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே கனவை பகிர்ந்து கொண்டவர்கள்.
பாரதிராஜா இயக்குநராக வேண்டும் என்று கனவு கண்டார். இளையராஜா இசையமைப்பாளராக வேண்டும் என்று போராடினார். அந்த போராட்ட காலங்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்ததாக பலமுறை கூறியுள்ளனர்.

இன்று கூட தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் பாரதிராஜா பட பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றால் அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் இசைதான்.
வைரமுத்து சொன்ன வார்த்தைகள்
பாரதிராஜா மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட இரங்கல் கவிதையில், "நீ தூரிகை... நான் வண்ணம்... நான் தூரிகை... நீ வண்ணம்..." என்று எழுதியிருந்தார்.
அதேபோல் ரசிகர்கள் தற்போது, "பாரதிராஜா காட்சிகளை உருவாக்கினார்... இளையராஜா அதற்கு உயிர் கொடுத்தார்" என்று பதிவிட்டு வருகின்றனர்.
-
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
"எங்கே பாரதிராஜா? இனி நான் என்ன பதில் சொல்வேன்?” கதறிய வைரமுத்து... கண்கலங்க வைத்த இறுதி மரியாதை! -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி












Click it and Unblock the Notifications