தேனியில் என்னை கிடத்திடுங்க.. கடைசி வரை தனிமையில் வாடிய பாரதிராஜா உதிர்த்த கண்ணீர் வார்த்தைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜாவுக்கு நினைவிடத்தை அமைத்து, அங்கு அவருடைய புத்தகங்கள், புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த மியூசியம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மற்றும் NFTC போன்ற கல்வி நிறுவனங்களில் திரைப்படம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்கள் அந்த நினைவிடத்திற்கு நேரடியாகச் சென்று திரைப்பட கலையையும் அதன் நுணுக்கங்களையும் விரிவாகக் கற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு சிறந்த ஆய்வு சூழலை, தமிழக அரசும் திரையுலகினரும் இணைந்து அங்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

wow thamizha சேனலில் மூத்த பத்திரிகையாளர்கள் தேனி கண்ணன், தளவாய் சுந்தரம் இருவரும் பாரதிராஜாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.. அப்போது அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்தனர்.

Bharathiraja Theni Gangai Amaran Manoj Property Dispute

தேனியில் படுக்க போடணும்

அவர்கள் வீடியோவில் பேசும்போது, "என்னை இப்படியே விட்டுடக்கூடாது. என்னை தேனியில்தான் "படுக்க போடணும்".. என்று தன்னுடைய மகள் ஜனனியிடம் சொல்லி உள்ளார். அதேபோல தனக்கு நெருக்கமான இளையராஜா, கங்கை அமரனிடமும் இந்த விருப்பத்தை சொல்லி உள்ளார்.

பாரதிராஜா இயக்கிய "புதிய வார்ப்புகள்" படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், வில்லனின் அடியாளாக வரும் கவுண்டமணி கேரக்டர், நாயகி ரதியின் கழுத்தில் தாலி கட்டிவிடுவார்.

ஆனால், பிறகு தன் தவறை உணர்ந்து, ரதியின் கழுத்தில் ஏறிய தாலியைத் தன் கையாலேயே அறுத்து எறிந்துவிட்டு, அவள் விரும்பிய பாக்யராஜுடன் அனுப்பி வைப்பார். அந்தத் தாலி சென்டிமென்ட்டை உடைத்த புரட்சி போலவே, இன்று அவருடைய மகள் ஜனனி சமூக வழக்கங்களை உடைத்து, தந்தைக்கு கொள்ளி வைத்தது அமைந்துள்ளது.

கங்கை அமரன் கோபம்

பாரதிராஜாவின் மனைவி கதறி அழுது கொண்டே ஓடிவரும்போது, கங்கை அமரன் திடீரென கொந்தளித்துக் கத்தினார். ஆனால் கங்கை அமரன் ஏதோ ஒரு விஐபி என்று நினைத்து கத்தவில்லை, உண்மையாகவே, உள்ளத்தின் ஆழத்திலிருந்து தன் நண்பனுக்காக கத்தியுள்ளார். அது ஆற்றாமையின் வெளிப்பாடு.

ஏனென்றால் பாரதிராஜா இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு வரை தனிமையில்தான் இருந்துள்ளார்.. உணவு கொடுப்பதற்கு மட்டுமே ஒரேயொரு நபர் இருந்துள்ளார். பாரதிராஜா இறந்த தகவல் தெரிந்ததும் கங்கை அமரன்தான் முதன்முதலாக ஓடி வந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் நிலப்பிரச்சனை தொடர்பாக, தேனியில் இருந்திருக்கிறார்கள்.

பாரதிராஜா, கங்கை அமரன், இளையராஜா, பாஸ்கர் ஆகியோர் சென்னைக்கு வந்த ஆரம்பக் காலத்தில், பாரதிராஜா ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துத் தனக்குக் கிடைத்த சம்பளத்தில் இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்து வளர்த்துவிட்டவர். அப்படிப்பட்டவர் கடைசி காலத்தில் தனிமையில் விடப்பட்டதைச் சகித்துக் கொள்ள முடியாமல்தான் கங்கை அமரன் அங்கு வந்த உறவினர்களிடம், "இவ்வளவு சேர்த்தவருக்கு எப்படி கவனிக்காமல் எங்கே போனீங்க?" என்று தன் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

இளையராஜா - பாரதிராஜா நட்பு

பாரதிராஜா எப்போதுமே தன் அன்பை மேடைகளில் பேசி வெளிப்படுத்துவார், ஆனால் இளையராஜா அதை வெளியில் காட்டாமல் உணர்வுப்பூர்வமாக வைத்திருப்பார். தனக்குக் கதை பிடிக்கவில்லை என்றாலும், தன் நண்பன் பாரதிராஜாவுக்காக உலகத் தரத்திலான இசையை இளையராஜா அமைத்துக் கொடுத்ததே அதற்கு சான்று.

பாரதிராஜா சமுதாயத்துக்கான படங்களை எடுத்தவர் என்பதால், அவர் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, தங்களைப் போன்ற ரசிகர்களுக்கும் உரிமை உள்ளவர்..

சொத்து பாகப்பிரிவினை சர்ச்சை

பாரதிராஜா தன் மகன் மனோஜை நினைத்து கங்கை அமரனிடம் மிகவும் உருக்கமாகவும் கண்ணீருடனும் மனம் விட்டு பலமுறை பேசியிருக்கிறார். ரொம்ப செல்லமாக வளர்த்திருக்கிறார் மனோஜை..

குழந்தைகள் அடம் பிடிப்பது போல மனோஜிடம் விளையாட்டுக்காகவும் சும்மாவும் "உனக்கு இதையெல்லாம் தர மாட்டேன்" என்று பாரதிராஜா சொத்து பற்றி சொல்லி உள்ளார்.. ஆனால் மனோஜ் அந்தப் பிடிவாதத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, கோபித்துக் கொண்டு குடும்பத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.

"நான் அவனிடம் சும்மாதான் விளையாட்டுக்குச் சொன்னேன் அமர், அவன் இப்படி சீரியஸாக எடுத்துக்கொண்டு பிரிந்து போவான் என்று நான் நினைக்கவில்லை" என்று கங்கை அமரனிடம் பாரதிராஜா கண்ணீர் விட்டு அழுது தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்..

பாரதிராஜாவின் மருமகள்

அதேபோல "என்னை இங்கேயே போட்டுறாதீங்கடா, என்னை தேனியில கொண்டு போய் கிடத்திருங்க" என்று கங்கை அமரனிடம் தன்னுடைய இறுதி ஆசையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மகன் மனோஜின் குடும்பத்தினர் எதிர்காலத்தில் கைவிடப்பட்டு விடுவார்களோ என்ற கவலையும் வருத்தமும் பரவலாக உள்ளது. காரணம், மனோஜின் மனைவி நந்தனா கேரளாவைச் சேர்ந்த, அதிகம் பேசத் தெரியாத ஒரு பெண்ணாக இருந்தாலும், அவர் பாரதிராஜாவின் மருமகள்.., அவருடைய பிள்ளைகள் பாரதிராஜாவின் நேரடி வாரிசுகள் என்பதை குடும்பத்தினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தங்களுக்குள் இருக்கும் பழைய பகைமை மற்றும் கருத்து வேறுபாடுகளைக் குடும்பத்தினர் முற்றிலும் கைவிட்டு, அந்தப் பிள்ளைகளையும் மருமகளையும் அன்போடு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும். பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில், சில வேண்டாத மற்றும் விருப்பத்தகாத சம்பவங்கள் நடந்தது உண்மையிலேயே மிகுந்த கவலையளிக்கிறது.

நந்தனா மனோஜ்

வேதம் புதிது படத்தில் வருவது போல, தன் சொந்தக் குடும்பத்திலும் ஒரு பிராமணப் பெண்ணை மருமகளாகக் கொண்டு வர வேண்டும் என்று பாரதிராஜா ஆசைப்பட்டுள்ளார். அதற்காக அவருக்கு நெருக்கமான ஒரு பிராமண நண்பரின் குடும்பமும் சம்மதமாக இருந்துள்ளது.

ஆனால், மனோஜ் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆரம்பத்தில் பாரதிராஜாவுக்கு மனவருத்தம் இருந்தது. இருந்தாலும் பிற்காலத்தில் தம்பதியை அரவணைத்து, பேரக்குழந்தைகள் மீதும் அவர் மிகுந்த பாசம் வைத்திருந்தார்..

பாரதிராஜா பெயரில் மியூசியம் தேவை

நல்லடக்கம் செய்யப்பட்ட தேனி காட்ரோடு பகுதியில் பாரதிராஜாவுக்கு வெறும் கட்டிடமாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான ஒரு நினைவிடத்தை அமைக்க வேண்டும்.. அங்கு அவருடைய புத்தகங்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் போன்றவற்றை ஒரு மியூசியம் போல வைக்க வேண்டும்.

ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மற்றும் NFTC போன்ற இடங்களில் திரைப்படம் சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், அந்த நினைவிடத்திற்குச் சென்று திரைப்படக் கலையைக் கற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு ஆய்வுச் சூழலை அரசு மற்றும் திரையுலகினர் இணைந்து அங்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+